Ranipet

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

News April 6, 2025

மகாவீர ஜெயந்தி முன்னிட்டு அரசு விடுமுறை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏப்ரல் 10, 2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை நாளாக இருக்கும். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்களின் பட்டியலில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தி தினத்தில் மாவட்டத்தில் உள்ள ஜைன சமுதாயத்தினர் பல்வேறு மத நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.

News April 6, 2025

1000 கணக்கில் போதை மாத்திரை கடத்திய இளைஞர்கள்

image

அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல்.4) இரவு ரயில் நிலையப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் பையில் 1087 போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து ஆற்காடு ஜெய்கணேஷ் (21), ராணிப்பேட்டை ஹரிஷ் குமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

News April 6, 2025

இராணிப்பேட்டை: கல்விக்கடன் பெற அரசின் சூப்பர் திட்டம்…!

image

உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்ய பிரதான் மந்திரி வித்யாலஷ்மி யோஜனா திட்டம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும். NIRF தரவரிசைப்படி கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளம் மூலம்  கூடுதல் விபரங்களை தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

News April 5, 2025

போரில் பூத்த ராணிப்பேட்டை

image

தமிழ்நாட்டில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ராணிப்பேட்டையின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசியம் உள்ளது.ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்த போது வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்கு மற்றும் அவருக்காக உடன்கட்டை ஏறிய ராணிபாய்க்காக பாலாற்றின் வடக்கு பகுதியில் புதிய நகரை உருவாக்கி அதற்கு ‘ராணிப்பேட்டை ‘ என பெயரிட்டார்.போரில் பூத்த ராணிப்பேட்டை வரலாற்றை ஷேர் பண்ணுங்க..

News April 5, 2025

மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு வேலைவாய்ப்பு

image

ராணிப்பேட்டையில் உள்ள எம்.ஆர்.எஃப் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 20-25 வயதுக்குட்பட்டவர்கள் டிகிரி கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000-25,000 வழங்கப்படும். இப்பணிக்கு 100 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 5, 2025

ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

image

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பால சரஸ்வதி (60), இவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சப்தகிரி ரயிலில் வந்து கொண்டிருந்தனர். ஏப்ரல் 3 இரவு அரக்கோணம் ரயில் நிலையம் 5வது நடைமேடையில் ரயில் நின்று புறப்படும் போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பால சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். ரயில்வே போலீசில் நேற்று புகார் தெரிவித்தார்.

News April 5, 2025

7 சவரன் செயினை பறித்த சுடிதார் கொள்ளையன்

image

பனப்பாக்கத்தை சேர்ந்தவர் பள்ளி தலைமை ஆசிரியை அபிதா 49. இவர் வியாழக்கிழமை இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது சுடிதார் அணிந்து வந்த கொள்ளையன், அபிதா அணிந்திருந்த ஏழு சவரன் செயினை பறித்துச் சென்றான். இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று எஸ்பி விவேகானந்த சுக்லா, டிஎஸ்பி ஜாபர்சித்திக் பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

News April 5, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 4 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வாலாஜா ராணிப்பேட்டை ஆற்காடு சிப்காட் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

News April 4, 2025

தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்

image

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 1856 ஜுன் 1ம் தேதி ராயபுரம் டூ வாலாஜா பேட்டை வரை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் தான் தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில்.ராயபுரம் ரயில்நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு அங்கிருந்து இயக்கப்பட்ட முதல் பயணிகள் ரயிலும் இது தான். ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெருமை பறைசாற்றும் இந்த அரிய தகவலை ஷேர் பண்ணுங்க…

error: Content is protected !!