India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கைத்தறி சேலைகள், தானிய உணவுகள், ஊறுகாய்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அணிகலன்கள் மற்றும் அனைத்து வகையான தினசரி பயன்பாட்டு பொருட்களை மக்கள் அதிகம் கூடும் பகுதியில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் விற்பனை செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்.27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மார்ச் 8 ம் தேதி காலை 6 மணிக்கு பெண்களுக்கான மராத்தான் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் மற்றும் 19 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் என தனித்தனியே மராத்தான் நடத்தப்பட உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா செய்தி குறிப்பில் இன்று தெரிவித்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணை புரியும் வகையில் 04-03-2025 மற்றும் 05-03-2025 ஆகிய இருநாட்கள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பயிலரங்கம் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சி மொழி செயலாக்கம் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று மாலை சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் ரயிலின் இருக்கைக்கு கீழே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூபாய் 3.25 லட்சம் ஆகும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களான அழகு சாதனங்கள், பொம்மை வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை விருப்ப கண்காட்சி மூலம், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ அலுவலகம் பின்புறம் உள்ள சந்தை வளாகத்தில் பிப்ரவரி.28 முதல் மார்ச் 3ம் தேதி வரை பொது மக்களுக்கு சரியான விலையில் விற்பனை செய்யலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, மக்களுடன் முதல்வர் முகாம் பேஸ் 3 வாலாஜா, ஆற்காடு மற்றும் திமிரி வட்டாரத்துக்குட்பட்ட கிராமங்களில் மார்ச் 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 15 துறைகளை ஒருங்கிணைத்து இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் மனுக்களை கொடுத்து பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே இன்று மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புரட்சி பாரதம் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை காவல்துறை இன்று (பிப்ரவரி -26)வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: சாலையில் சாகசம் செய்வது பெரும் விபத்துக்கு வழி வகுக்கும். மித வேகத்தில் செல்வோம். பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம். சாலை பாதுகாப்பு, நம் உயிர் பாதுகாப்பு என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.