India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் நாளை மாலை எழுத்தாளர் இமயம் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகின்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
சமூக வளைதளங்களில் மோசடிகளை தவிர்ப்பதற்கான சில குறிப்புகளை ராணிப்பேட்டை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தவும். எந்தவொரு online விண்ணப்பத்திலும் Debit/credit கார்டு விபரங்களை பகிற வேண்டாம். அதிக லாபம், பணம் இரட்டிப்பு என்ற ஆசை வார்த்தைகளை நம்பி Online-ல் பணம் செலுத்த வேண்டாம். விவரங்களை அறியாமல் லிங்கை ஷேர் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, Pharm. D முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
‘முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72 -ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 72 இடங்களில் ஏழை, எளியோா், முதியோா், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு நல உதவிகள், மருத்துவ முகாம், அன்னதானம் வழங்கப்பட உள்ளன என திமுக மாவட்டச் செயலாளரும், கைத்தறி- துணி நூல் துறை அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்., 28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் இன்று மூன்றாவது புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பங்கேற்று 35 பயனாளிகளுக்கு ரூபாய் மூன்று கோடியே 42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் திட்ட இயக்குனர் ஜெயசுதா நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வி இயக்ககம் இணைந்து புத்தக திருவிழா இன்று தொடங்கினர். இந்த புத்தகத் திருவிழாவை கைத்தறி துறை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் மற்றும் போக்குவரத்து துறையில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணன் (68) ஆகியோர் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சைல்ட் லைனுக்கு தகவல் தெரிவித்த வகுப்பு ஆசிரியர் சோளிங்கர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் போக்சோ வழக்கில் மாணவன், மெக்கானிக்கை நேற்று கைது செய்தனர்.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க
SBI PO ப்ரீலிம்ஸ் காலி பணி இடங்களுக்கான ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 28, மார்ச் 4, மற்றும் மார்ச் 6, ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் / தேர்வாளர்கள் உள்நுழைவுப் பக்கத்தின் மூலம் மெய்நிகர் கற்றல் போர்ட்டலில் (virtual learning portal) மாதிரி தேர்வை எழுதலாம். மாணவர்கள் VLE போர்டல் பதிவாளர்களாக இருக்க வேண்டும் என மாவட்ட வேலை வாய்ப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.