Ranipet

News April 8, 2025

குடும்ப பிரச்சனையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

image

மேல்புலம் கிராமம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (55). நேற்று (ஏப்ரல்.07) குடும்ப பிரச்னை காரணமாக தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல) 

News April 8, 2025

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆட்சியர் அறிவிப்பு

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் காசோலை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். தகுதியானவர்கள் www.sdat.tn.gov.in ல் மே 9 ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

நகை கடையில் செயின் திருடிய பெண் கைது

image

நெமிலி பஜார் பகுதியை சேர்ந்தவர் சுசில்குமார். இவர் அதே பகுதியில் நகை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் தேதி சுசில்குமாரின் கடைக்கு வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போன்று ஒன்றை சவரன் செயினை திருடி சென்றார். நெமிலி போலீசார் இதனை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், திருவள்ளூரை சேர்ந்த ரஹானா என்பவர் நகையை  திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று அவரை கைது போலீசார் செய்தனர்.

News April 7, 2025

நாட்டின் முதல் காந்தி சிலை

image

ராணிப்பேட்டை முத்துக்கடை ஜங்சனில் வைக்கப்பட்ட காந்தி சிலை தான் நாட்டிலேயே காந்திக்கு வைக்கப்பட்ட முதல் சிலை. காந்தி இறந்த 13 நாட்களில் ஜெயராமன் செட்டியார் என்பரால் வைக்கப்பட்ட இந்த சிலை இன்று ராணிபேட்டை அரசு பள்ளியில் உள்ளது. உலகம் முழுவதும் காந்தியின் சில உள்ள நிலையில் முதல் காந்தி சிலையை நிறுவி பெருமை பெருமை பெற்றுள்ளது ராணிப்பேட்டை. ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

டவுன் போலீஸ் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

image

காவல் படைக்கு சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 1,420 கிராம காவலர் பணியிடங்களை நிரப்ப ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்களுக்கு 11, பெண்களுக்கு 1 என மொத்தம் 12 காலியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

News April 7, 2025

சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது கள்ளக்குறிச்சி அருகே விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (30) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

News April 7, 2025

ஏப்., 12ல் அரக்கோணத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

அரக்கோணத்தில் அபிஷேக் அரசு மருத்துவமனை எதிரே வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜே.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தில் படித்து ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், செவிலியர்கள், கலைக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு ஏப்.12ம் தேதி காலை 8.30 மணி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News April 7, 2025

ராணிப்பேட்டையில் அங்கன்வாடி காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 164 அங்கன்வாடி பணியாளர், 3 குறுஅங்கன்வாடி பணியாளர், 155 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்படுகிறது என் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை இந்த <>இணையத்தில் <<>>பதிவிறக்கம் செய்யலாம். ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News April 6, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 6 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அரக்கோணம் காவேரிப்பாக்கம் சோளிங்கர் பாணாவரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100

News April 6, 2025

சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கான் பேடா

image

ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆற்காடு பகுதியில் தயார் செய்ப்படும் மக்கான் பேடா மிகவும் பிரபலம். சுவையில் குலாப் ஜாமூன் போல இருக்கும் மக்கான் பேடா உருண்டையில் உலர் பழங்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதனுள் வைக்கப்படும் உலர்த்தப்பட்ட முந்திர, திராட்சை. பூசணி விதை, வெள்ளரி விதை போன்றவை தான் இதன் தனித்துவத்தை உறுதி செய்கிறது. ஆற்காடு மக்கான் பேடா பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!