India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சோளிங்கர் தாலுகா ஒழுகூர் கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் ஜெயவேலு. இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். முறையாக எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த நிலையில் இன்று மருத்துவ குழுவினர் வாலாஜா சப்-இன்ஸ்பெக்டர் துணையுடன் அவரை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பெங்களூருவை சேர்ந்த முத்துக்குமார்(47 ) என்பவர் நேற்று (மே 1) படிக்கட்டில் ஏறி சென்று கொண்டிருந்தார். 1200வது படிக்கட்டு ஏறி செல்லும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோளிங்கரில் சி.எம்.அண்ணாமலை பில்டர்ஸ் சார்பில் நிறுவனர் தமிழரசன் தலைமையில் உழைப்பாளர் தினம் நேற்று(மே 1) கொண்டாடப்பட்டது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் காந்தி, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் கலந்து கொண்டனர். மாவட்ட து.செயலாளர் சிவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அருகே ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார்.

தானாபூரிலிருந்து பெரம்பூர், அரக்கோணம் வழியாக பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று(ஏப்.30) இரவு அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏ-2 ஏசி கோச் கழிவறை கண்ணாடி மீது கல் வீசப்பட்டது. இதுகுறித்து கழிவறைக்கு சென்ற பயணி ஒருவர் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தார். அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று(ஏப்.30) தொடங்கியது. ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகளப் போட்டிக்கு பயிற்சி, வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குத்துச்சண்டை பயிற்சி மற்றும் கையுந்து பந்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

திருத்தணி மிட்டக்கண்டிகையைச் சேர்ந்தவர் ரகுகுமார். இவர் தனது உறவினர் ராமதாஸ் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அரக்கோணம் காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை பள்ளூர் பருவமேடு அருகே இன்று மாலை செல்லும் போது காரில் இருந்து புகை வந்ததால் இருவரும் கீழே இறங்கினர். அடுத்த சில நொடிகளில் கார் தீ பற்றி எரிந்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவியர் சேர்வதற்கான தேர்வுக்கு தகுதியான மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 95140-00777 என்ற எண்ணிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் நேரிலும் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவியர் சேர்வதற்கான தேர்வுக்கு தகுதியான மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 95140- 00777 என்ற எண்ணிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேரிலும் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.