India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கும் வகையில் அரக்கோணம் நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைச்சல் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார அலுவலர் மோகன் தலைமை வகித்தார். இதில் பலர் உடன் இருந்தனர்.

வாலாஜா தாலுகா தகரகுப்பம் அடுத்த ஒட்டனேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக சோளிங்கர் போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது. நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அப்பகுதியில் திடீர் ரெய்டு நடத்திய போது அதே பகுதியைச் சேர்ந்த விஜயா( 60) என்பவர் வீட்டில் 18 லிட்டர் கள்ள சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாதுகாப்பு அறைகள் நல்ல நிலையில் உள்ளதா என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேர்தல் அலுவலருமான வளர்மதி, காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோர் இணைந்து இன்று பார்வையிட்டு அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

வாலாஜா தாலுகா சுமைதாங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை காவேரிப்பாக்கம் பெரிய கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை(58) கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்காக, அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டையிலுள்ள ரத்தினகிரி என்னும் மலையின் மீது அமைந்துள்ளது பாலமுருகன் கோயில். இக்கோயிலில் முருகன் திருக்குலாம், குருகோலம் ஆகிய இரு கோலங்களில் காட்சித்தருகிறார். 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் சோழர்கால சிற்பக்கலை வடிவில் கற்பக்கிரகம் கிரானைட் கற்கலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பே அர்ச்சனைகள் அனைத்தும் தமிழில் செய்யப்படுவதே.

நெமிலி தாலுகா நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா. இவரது மருமகன் மதன். இவர்களுக்கிடையே நேற்று(மே 3) இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது சுசிலாவை மதன் கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க வந்த அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சுசீலாவின் இன்னொரு மகளான ரோஜா ஆகியோரையும் மதன் குத்தியுள்ளார். மதனை கிராம மக்கள் பிடித்து கட்டிப்போட்டு, காயமடைந்த 3 பேரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ராணிப்பேட்டை, சத்திரம் புதூர் பகுதியில் போலியாக மருத்துவம் பார்த்த திவ்யா என்ற பெண் இன்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் போலியாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்தால் அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி இன்று தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் ராணிப்பேட்டை மாவட்ட, தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள்9642422022 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

அரக்கோணம், பரமேஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேரன்(22). இவர் நேற்று(மே 2) இரவு தக்கோலத்தில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தக்கோலம் கூட்ரோடு அருகில் செல்லும்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற +2 தேர்வில் 150 மாணவ, மாணவிகளும், 10ம் வகுப்பு பொதுதேர்வில் 123 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதவில்லை. அதன்படி மொத்தம் 273 மாணவ, மாணவிகளையும் முதன்மை கல்வி அலுவலர் உஷா மேற்பார்வையில் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு துணை தேர்வு எழுத வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.