Ranipet

News October 8, 2025

ராணிப்பேட்டை: மின் கட்டணம் செலுத்துவது இனி ஈஸி!

image

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்! TNEB செயலி அல்லது அதன் அதிகாரப்பூர்வ <>இணையதளம் <<>>மூலம் கட்டணம் செலுத்துவது எளிது. உங்கள் பெயர் மற்றும் EB கணக்கு எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையை காட்டும். அதை UPI அல்லது Netbanking மூலம் செலுத்தலாம். மேலும் தகவல்களுக்கு, 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும். SHARE பண்ணுங்க!

News October 8, 2025

ராணிப்பேட்டை: டிகிரி இருக்கா…? வங்கியில் சூப்பர் வேலை!

image

கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 3500 காலியிடங்கள் உள்ளது அதில் தமிழ்நாட்டில் மட்டும் 394. 20-28 வயதுக்குட்பட்டவர்கள் வரும் அக்.12க்குள் இந்த <>லிங்க் மூலம்<<>> விண்ணபிக்கலாம். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.15,000 உதவித்தொகை உண்டு. வங்கி வேலைக்கு முயற்சி செய்யும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 8, 2025

ராணிப்பேட்டை:இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் செய்து<<>> உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News October 8, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT!

image

அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள தாழ்வுநிலை மண்டலத்தால், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை (அக்.-9) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட் இருப்பதால் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும்.

News October 8, 2025

ராணிப்பேட்டை: முகாமை புறக்கணித்த கிராம மக்கள்

image

கொண்டபாளையத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது, இக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 3 தலைமுறைகளாக 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களை கோயில் நிர்வாகம் காலி செய்வதற்காக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து நேற்று அக்டோபர் 7ம் தேதி அப்பகுதியில் மக்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்தனர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

News October 8, 2025

ராணிப்பேட்டை: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

மாம்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (70), இவர் நேற்று அக்டோபர் 7ம் தேதி தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இவர் இந்திய குடியரசு கட்சியின் முன்னாள் மாவட்ட விவசாய அணி தலைவராக இருந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வாழைப்பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 8, 2025

ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா கிரீன் மிஷன் திட்டம் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள் இன்று (அக்.7) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் சக்கரமல்லூர் ஊராட்சியில் கிரீன் மிஷன் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வரும் 7,000 மரக் கன்றுகளை நாற்றங்கால் பண்ணையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மரக்கன்றுகள் பராமரிப்பு மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News October 8, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து நடவடிக்கை அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால்7.10, 2025 அன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் வாலாஜா சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News October 8, 2025

கலைஞர் கனவு இல்லம் திட்டம் இடத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்

image

இராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா
இன்று (அக்.7) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், சக்கரமல்லூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார். தற்பொழுது கன்னி கோவில் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் 30 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு அதில் 6 நபர்களின் வீடுகளை நிலத்தினை ஆய்வு செய்தார்.

News October 8, 2025

பள்ளி சீரமைப்பு பணிகளை குறித்து ஆட்சியர் ஆய்வு

image

ராணிப்பேட்டை ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா இன்று(அக். 7) ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் எசையனூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் பகுதியிலுள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.2.16 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும்,பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க ஊராட்சி மன்ற தலைவரை கேட்டுக் கொண்டதுடன், மாணவர்களின் வாசிப்புத் திறனை நேரில் பார்வையிட்டார்.

error: Content is protected !!