Ranipet

News October 10, 2025

ராணிப்பேட்டை: SIM CARD வைத்திருப்போர் இதை தெரிஞ்சிக்கோங்க!

image

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற புதிய விதி அமலானது. உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, இந்த <>லிங்கில் <<>>உங்கள் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையலாம். உங்கள் பெயரில் உள்ள அனைத்து எண்களின் பட்டியலும் காட்டப்படும். அடையாளம் தெரியாத எண்கள் இருந்தால் உடனடியாகப் புகார் செய்து பிளாக் செய்யலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 10, 2025

ராணிப்பேட்டை: இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மாசுவாமி திருக்கோயிலில் (இந்து சமய அறநிலையத்துறை) இளநிலை உதவியாளர், தமிழ் புலவர், காவலர் உள்ளிட்ட 14 பணியிடங்களுக்குத் தொகுப்பூதிய அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம்- 7,590- 9,250 வரை வழங்கப்பட இருக்கிறது . 8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்த, 45 வயதுக்குட்பட்ட இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் அக்டோபர் 18-ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம்.

News October 10, 2025

ராணிப்பேட்டை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

image

தமிழக ரயில்வேயில் selection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்க கிளிக் <<>>செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 10, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 9, 2025

இராணிப்பேட்டை: கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

image

சோளிங்கர் அடுத்த சூரை பள்ளியில் சூரை, ஆயல், நந்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் கர்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மஞ்சுளா சுரேஷ், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் இருந்தார்.

News October 9, 2025

ராணிப்பேட்டை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா ?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 9, 2025

ராணிப்பேட்டை: வேளாண்துறை சார்பில் மானியம்!

image

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது <>இந்த லிங்க்<<>> மூலமாகவும் விண்ணைப்பிக்கலாம். விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க!

News October 9, 2025

ராணிப்பேட்டை: ஆதார் புது RULES; குழந்தைகளுக்கு இலவசம்!

image

ராணிப்பேட்டை அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்க்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 9, 2025

ராணிப்பேட்டை: NLC-ல் 1,101 காலியிடங்கள் APPLY பண்ணுங்க!

image

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க மூலம்<<>> அக்.27ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க. ஒருவருக்கு வேலை கிடைத்தாலும் நல்லதுதானே!

News October 9, 2025

ராணிப்பேட்டை: மாவட்ட அளவிலான பேச்சி போட்டிக்கு அழைப்பு

image

பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் வாலாசாப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் அக்டோபர் 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். மேலும் தகவல்களுக்கு
0416-2256166 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!