Ranipet

News March 2, 2025

மைசூர் ரயிலில் கட்டணம் குறைப்பு

image

சென்னையிலிருந்து மைசூருக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் இன்று முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வண்டி எண் 16551 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் நிறுத்தங்களில் நின்று செல்லும். ஆனால் ரயில் கட்டணம் அரக்கோணத்திலிருந்து காட்பாடிக்கு செல்ல இதற்கு முன்பு ரூ. 55 வசூலிக்கப்பட்டது. இனி 40 ரூபாயாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 2, 2025

17 வயது சிறுமியின் திருமணம் நிறுத்தம்

image

கலவை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை என அவரது தந்தை இரு நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து கலவை போலீசார் விசாரித்து வந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சிறுமியையும் அந்த வாலிபரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் சிறுமியை வாலாஜா காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

News March 1, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் அல்லது 9884098100 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.

News March 1, 2025

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் நாளை மாலை எழுத்தாளர் இமயம் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகின்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தகவல்

image

சமூக வளைதளங்களில் மோசடிகளை தவிர்ப்பதற்கான சில குறிப்புகளை ராணிப்பேட்டை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தவும். எந்தவொரு online விண்ணப்பத்திலும் Debit/credit கார்டு விபரங்களை பகிற வேண்டாம். அதிக லாபம், பணம் இரட்டிப்பு என்ற ஆசை வார்த்தைகளை நம்பி Online-ல் பணம் செலுத்த வேண்டாம். விவரங்களை அறியாமல் லிங்கை ஷேர் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளது.

News March 1, 2025

பார்மசி படிப்பு முடித்தவர்களுக்கு வேலை

image

தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, Pharm. D முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News March 1, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72 இடங்களில் கொண்டாட்டம்

image

‘முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72 -ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 72 இடங்களில் ஏழை, எளியோா், முதியோா், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு நல உதவிகள், மருத்துவ முகாம், அன்னதானம் வழங்கப்பட உள்ளன என திமுக மாவட்டச் செயலாளரும், கைத்தறி- துணி நூல் துறை அமைச்சருமான ஆா்.காந்தி தெரிவித்துள்ளார்.

News February 28, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (பிப்., 28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News February 28, 2025

35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

image

ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் இன்று மூன்றாவது புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பங்கேற்று 35 பயனாளிகளுக்கு ரூபாய் மூன்று கோடியே 42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் திட்ட இயக்குனர் ஜெயசுதா நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் உடன் இருந்தனர்.

News February 28, 2025

புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர்

image

ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வி இயக்ககம் இணைந்து புத்தக திருவிழா இன்று தொடங்கினர். இந்த புத்தகத் திருவிழாவை கைத்தறி துறை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!