India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 14 அன்று வி.ஆர்.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கும், அக்டோபர் 15 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறும். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் 0416-2256166 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் அக்டோபர் 17-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பயனடையலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களிடம் இருந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. விருப்பம் உள்ள மாணவ- மாணவிகள் https://tamilvalar chithurai.tn.gov.in இணையதளம் மூலம் வரும் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மையம் (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் அக்.17-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், 10, 12, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். (வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க)

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை அருண் தலைமையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10.10.2025) தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் கலெக்டர் சந்திரகலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினசரி இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாகன ரோந்து, கால்நடை ரோந்து என இருவிதமாகவும் பணி செய்து வருகின்றனர்.

தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர், டெக்னீஷியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, ஐடிஐ, (Visual Art / Fine Arts / Commercial Arts) டிகிரி முடித்த 19 முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப மாதம் ரூ. 19,900 – ரூ. 92,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<

ராணிப்பேட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக உணவில் தேரை, பல்லி, பாம்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

ராணிப்பேட்டை, போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.