Ranipet

News April 29, 2025

ராணிப்பேட்டையில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

image

ராணிப்பேட்டை அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 211 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து நாளை(ஏப்.30) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News April 29, 2025

ராணிப்பேட்டை: பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்கள்

image

▶ அரக்கோணம் கொள்ளிவள்ளியம்மன் கோயில்
▶ பள்ளூர் வராகியம்மன் கோயில்
▶ ஆற்காடு கருமாரியம்மன் கோயில்
▶ மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்
▶ தென்கடப்பந்தாங்கல் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் சக்தி வாய்ந்த இந்த அம்மன் கோயில்களை உங்கள் குடும்ப நபர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 29, 2025

ராணிப்பேட்டை: குறைதீர் கூட்டத்தில் 403 மனுக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (28.04.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற்றனர். தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 29, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என்று ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா அறிவித்துள்ளார். கூட்டங்களில் பொதுநிதி செலவுகள், கட்டட அனுமதி, வரி வசூல் உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படும். வட்டாட்சியர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு கூட்டங்களை கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறக்காம கலந்துக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

News April 28, 2025

ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பனி விவரம் போலீசார் வெளியீடு

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் இன்று (april 28) வெளியிடப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம். பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கையால், சட்டம் ஒழுங்கு மேலும் உறுதியடையும். அவசர நேரத்தில் காவல் எண்ணை அழைக்கவும் 9884098100.

News April 28, 2025

ராணிப்பேட்டையில் பிரசித்திபெற்ற சிவன் கோயில்

image

ராணிப்பேட்டை அருகே அசுரன் காஞ்சன் சிவன் பக்தனாயிருந்து தவம் செய்தும்,சிவன் தரிசனம் தரவில்லை. எனவே அசுரன் குருக்களை சித்திரவதை செய்தான். இதையறிந்த ​​சிவன் ரிஷபத்தை வைத்து அசுரனை கொன்றார். அசுரன் சிவனிடம் மன்னிப்பு கேட்டதால் சிவன் மன்னித்தார், அதனால் இந்த மலைக்கு காஞ்சனகிரியென்று பெயர் வந்தது. இந்த கோயிலில் வழிபட்டால் பிரச்னைகள் நீங்குமென்பது நம்பிக்கை. இதை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

News April 28, 2025

ராணிப்பேட்டையில் எந்த பதவியில் யார்?

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்- சந்திரகலா(9445754000), ராணிப்பேட்டை எஸ்.பி- விவேகானந்தா சுக்லா(9498100660), மாவட்ட வருவாய் அலுவலர்- சுரேஷ்(9489543000), ராணிப்பேட்டை கோட்ட வருவாய் அலுவலர்- ராஜராஜன்(9445000416), அரக்கோணம் கோட்ட வருவாய் அலுவலர்- வெங்கடேசன்(04177291075), ஆட்சியரின் நேர்முக உதவியாளர்- விஜயராகவன்(04172274000), SC/ST நலத்துறை அலுவலர்- சுகுமார்(9941332021). மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 28, 2025

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி 

image

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்

News April 28, 2025

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியை சேர்ந்த விவசாயி குப்பன் (45), இவரது உறவினர் மகன் கண்ணன் (13) என்பவரை வளர்த்து வந்தார். 7ஆம் வகுப்பு முடித்துள்ள சிறுவன் அமராபுரம் கிராமத்திற்கு பசுமாடுகளை மேய்க்க சென்றார். நீண்ட நேரம் கண்ணன் வீடு திரும்பாத நிலையில், அமராபுரம் கிராம குளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 27, 2025

இராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை (27.04.2025) இன்று இரவு பாதுகாப்பு பணிக்கான ரவுண்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களில் பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும். அவசர தேவைக்காக இவை பயனுள்ளதாக இருக்கும்.

error: Content is protected !!