India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் J.U. சந்திரகலா தலைமையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் தெரிவித்தாவது: மாவட்டத்தில் ஆண் பெண் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள அரக்கோணம் சோளிங்கர் ஆற்காடு மற்றும் திமிரி வட்டாரங்களில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் சிசு கரு கலைப்பு தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவ்விரண்டு நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி டிரோன்கள் பறக்க விடுவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வரும் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்தில் நடக்கும் விழாவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருகிறார். எனவே, அந்த 2 நாட்கள் மாவட்ட முழுதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
பாணாவரத்தில் குட்கா விற்பனை செய்த கடைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் இன்று போலீஸ் முன்னிலையில் சீல் வைத்தார். மேலும் அந்த கடைக்கு ரூபாய் 25000 அபராதம் விதித்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து குட்கா விற்பனை செய்யும் கடை உரிமையாளருக்கு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை செய்தார்.
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு பேசுகையில், குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் குறித்த புகார்கள் குறித்து உடனுக்குடன் போலீசார் எஃப்ஐஆர்(FIR) பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிதாக பணியில் சேர்ந்த டாக்டர்கள் நோயாளியிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபடியாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <
காவேரிப்பாக்கம் போலீசார், ராமாபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது ஆந்திர மாநில பதிவெண் கொண்ட மூன்று லாரிகள் வருவதை கண்ட போலீசார் அவற்றை சோதனை செய்த பொழுது அதில் சிலிக்கான் மணல் இருந்ததுள்ளது அவற்றிற்கான உரிய ஆவணம் இல்லாததால், லாரிகளை பறிமுதல் செய்து. லாரியில் வந்த கலைச்செல்வன் 28, ரகு 45, சுதாகர் 36, திருச்செல்வம் 45, அசோகன் 43, ஆகியோரை கைது விசாரணை செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இன்று காவேரிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வினை மாணவ, மாணவிகள் எழுதுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி இருந்தார்.
Sorry, no posts matched your criteria.