India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு முறையான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் அனைத்து. நகராட்சி பேரூராட்சி கிராம ஊராட்சிகளில் முறையாக குடிநீர் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக இன்று தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல் வந்தது. அப்போது அங்கு வந்த விவசாய சங்கத்தினரை ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தமிழ்நாடு விவசாய சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் கொடுப்பதற்காக அழைத்து சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் நான்கு பெண் பயனாளிகளுக்கு தலா ரூ.5,300 மதிப்பில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் திட்ட இயக்குனர் லோகநாயகி நேர்முக உதவியாளர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மனுக்களை பெற்றுக் கொண்டார் . அப்போது ஒரு மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளை ஆட்சியர் வழங்கினார் . அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் உடன் இருந்தார்.

தமிழகத்தில் 3 வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து, அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ரவி இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று வாலாஜா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் வி.ஆர்.வி. பள்ளி ஆகிய 2 மையங்களில் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 446 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 428 பேர் தேர்வு எழுதியதாகவும் 18 பேர் தேர்வு எழுத வரவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் அனைத்து வரிகளையும் உயர்த்திய தமிழக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வருகிற 22-ஆம் தேதி ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான என்.ஜூ.பார்த்திபன் தலைமை வகிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.