India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்- சந்திரகலா(9445754000), ராணிப்பேட்டை எஸ்.பி- விவேகானந்தா சுக்லா(9498100660), மாவட்ட வருவாய் அலுவலர்- சுரேஷ்(9489543000), ராணிப்பேட்டை கோட்ட வருவாய் அலுவலர்- ராஜராஜன்(9445000416), அரக்கோணம் கோட்ட வருவாய் அலுவலர்- வெங்கடேசன்(04177291075), ஆட்சியரின் நேர்முக உதவியாளர்- விஜயராகவன்(04172274000), SC/ST நலத்துறை அலுவலர்- சுகுமார்(9941332021). மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியை சேர்ந்த விவசாயி குப்பன் (45), இவரது உறவினர் மகன் கண்ணன் (13) என்பவரை வளர்த்து வந்தார். 7ஆம் வகுப்பு முடித்துள்ள சிறுவன் அமராபுரம் கிராமத்திற்கு பசுமாடுகளை மேய்க்க சென்றார். நீண்ட நேரம் கண்ணன் வீடு திரும்பாத நிலையில், அமராபுரம் கிராம குளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை (27.04.2025) இன்று இரவு பாதுகாப்பு பணிக்கான ரவுண்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களில் பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும். அவசர தேவைக்காக இவை பயனுள்ளதாக இருக்கும்.
▶காஞ்சனகிரி தேவஸ்தானம்
▶திரௌபதி அம்மன் கோயில்
▶கங்கை அம்மன் ஸ்ரீ படவேட்டமன் கோயில்
▶மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில்
▶முத்தாலம்மன் கோயில்
▶அரசமரத்தடி ஸ்ரீ சந்தான விநாயகர் ஆலயம்
▶மஹா பிரிதிங்கரா கோயில்
▶பவானி அம்மன் கோயில்
▶பூங்காவனத்தம்மன் கோயில்
▶பொன்னியம்மன் கோயில்
▶சமயபுரத்து மாரியம்மன் கோயில்
▶ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்
▶புத்து மாரியம்மன் கோயில்
▶திரிசூலி முத்துமாரியம்மன் கோயில்
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காவலுக்கு இருக்கும் போலீசார் அவர்களைப் பற்றிய பெயர் குறிப்பு மற்றும் அலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ராணிப்பேட்டை பொதுமக்கள் எவையேனும் தேவை ஏற்பட்டால் நிச்சயமாக இந்த அலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் தகவலுக்கு மேலே உள்ள அட்டவணையை பார்க்கவும்.
ராணிப்பேட்டை அருகே பெருமூச்சி கிராம பேருந்து நிறுத்தம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை ஓச்சேரியில் சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பொதுவாக காமாட்சி அம்மனை நாம் அமர்ந்த கோலத்தில் தரிசித்து இருப்போம், ஆனால் இந்த கோயிலில் தாமரை மலரில் நின்று காட்சி தருகிறார் . குழந்தை வரனுக்காக காத்திருப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வேண்டினாள் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை செல்வத்துக்காக காத்திருப்பவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT)
Sorry, no posts matched your criteria.