India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) 56-வது ஆண்டு விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள மண்டல பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் அதன் டைரக்டர் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் பாட்டி தெரிவிக்கையில், சிஐஎஸ்எப் (CISF) பிரிவில் அடுத்த 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் வீரர்கள் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் 56ஆவது உதயநாள் விழா கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமித்ஷா இன்று(மார்ச் 7) கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தில் வலுப்படுத்துகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பதிலாக தமிழ் திரைப்பட நடிகர் சந்தான பாரதியின் போஸ்டரை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஒட்டிய பாஜக நிர்வாகியால் ராணிப்பேட்டை முழுவதும் பாஜகவினர் மற்றும் பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் பேசு பொருளாகியுள்ளது.
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலையற்ற நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 56 ஆவது உதய நாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை 8:10 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். அதைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த அதிகாரிகள், பயிற்சி வீரர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
காவேரிப்பாக்கம் அடுத்த பனப்பாக்கத்தில் அமைந்துள்ள சவுந்தரநாயகி உடனுறை மயூரநாதர் ஆலயம் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அகத்தியருக்கு கையிலையிலிருந்து சிவபெருமான் திருக்கல்யாணக் கோலத்தை காட்சிகொடுத்து அருளிய தலம் என்பதால் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலரும் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் 17 இவர் நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இன்று பொது தேர்வு எழுதிவிட்டு தனது நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார் அப்போது நேரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார் தீயணைப்பு துறை யினர் ஒரு மணி நேரம் தேடி சிதம்பரத்தின் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம், செட்டித்தாங்கல் ஊராட்சியில் இன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் மற்றும் நாடகமேடை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை தினவிழாவில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மார்.5) தனி விமான மூலம் அரக்கோணம் INS ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு வருகை தர உள்ளார். பின்பு அங்கிருந்து தக்கோலம் சென்று, பின்பு CISF மையத்திற்கு சென்று அங்கே தங்குகிறார். மறுநாள் (மார்.7) அதாவது நாளை, CISF வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், சிறப்புரையாற்ற உள்ளார்.
Sorry, no posts matched your criteria.