India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்கும் பணிகள் குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், நேர்முக உதவியாளர் நிலம் கலைவாணி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் புதிய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. மேலும் ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் இந்தியாவின் முதன் ஜாகுவார், லேண்ட் ரோவர் அலையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமையவுள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட், தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 7 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சீட் திட்டம் சார்பில் நிலம், வீடு மற்றும் வீடுகள் கட்ட நிதி உதவி வழங்குதல் சுகாதாரம் கல்விக்கான அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயனடைய விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்தில் உள்ள விமான ஓடுபாதை 4,500 மீட்டர் நீளமுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது நீளமான ஓடுபாதையாகும். மேலும் இது ஆசியாவின் இரண்டாவது கடற்படை பெயிற்சி மையமாகும்.

அரக்கோணம் இந்திய கடற்படை நகர லயன்ஸ் சங்கம் ஜாமியா & ஈத்கா மஸ்ஜித் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் அரக்கோணம் அந்-நூர் கண் மருத்துவமணை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று அரக்கோணம் கனரா பேங்க் அருகில் ஜாமியா கம்யூனிட்டி ஹாலில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. கண் எரிச்சல், கருவிழி பரிசோதனை, கிட்ட பார்வை. தூரப்பார்வை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் லப்பைபேட்டை பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற மாணவன் எஸ்.கீர்த்திவாசனுக்கு, அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு எஸ்.எம்.சுகுமார் தனியார் கண் மருத்துவமனையில் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தார். தனது சொந்த செலவில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் கண்ணாடி வழங்கினார்.

ராணிப்பேட்டை திமுக மாநில சுற்றுச்சூழல் அணியின் துணைச்செயலாளர் வினோத் காந்தியின் இல்லத்தில், குடியாத்தம் நகர கழக திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் டிசைனர் பாலாஜி நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டையில் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு வருகை புரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பட்டு வேட்டி அணிவித்து நேரில் வரவேற்றார்
Sorry, no posts matched your criteria.