Ranipet

News May 7, 2025

ராணிப்பேட்டை: அடிப்படை பிரச்சனையா கவலை வேண்டாம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News May 7, 2025

ராணிப்பேட்டையில் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகளை நீக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா அதிரடி உத்தரவிட்டுள்ளார். உணவுப் பொருள் விநியோக கூட்டத்தில், 83% ஆதார் உறுதிப்படுத்தல் முடிந்த நிலையில், மீதமுள்ள 51,133 அட்டைகள் விரைவில் ஆய்வு செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

News April 30, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க போறிங்களா?

image

அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். இல்லாவிட்டாலும் கல் உப்பாவது வாங்கிவிடுங்கள். ஷேர் பண்ணுங்க.

News April 30, 2025

இராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (ஏப்ரல்.29) இரவு பாதுகாப்பு பணிக்கான ரோந்து நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும். அவசர தேவைக்காக இவை பயனுள்ளதாக இருக்கும்.

News April 30, 2025

டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்

image

மே1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீறி டாஸ்மாக் அரசு மதுபான கடைகள் திறந்தால் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுக் கூடத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

ராணிப்பேட்டையில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

image

ராணிப்பேட்டை அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 211 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளன. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து நாளை(ஏப்.30) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News April 29, 2025

ராணிப்பேட்டை: பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்கள்

image

▶ அரக்கோணம் கொள்ளிவள்ளியம்மன் கோயில்
▶ பள்ளூர் வராகியம்மன் கோயில்
▶ ஆற்காடு கருமாரியம்மன் கோயில்
▶ மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்
▶ தென்கடப்பந்தாங்கல் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் சக்தி வாய்ந்த இந்த அம்மன் கோயில்களை உங்கள் குடும்ப நபர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 29, 2025

ராணிப்பேட்டை: குறைதீர் கூட்டத்தில் 403 மனுக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (28.04.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற்றனர். தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 29, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என்று ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா அறிவித்துள்ளார். கூட்டங்களில் பொதுநிதி செலவுகள், கட்டட அனுமதி, வரி வசூல் உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படும். வட்டாட்சியர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு கூட்டங்களை கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறக்காம கலந்துக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

News April 28, 2025

ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பனி விவரம் போலீசார் வெளியீடு

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் இன்று (april 28) வெளியிடப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம். பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கையால், சட்டம் ஒழுங்கு மேலும் உறுதியடையும். அவசர நேரத்தில் காவல் எண்ணை அழைக்கவும் 9884098100.

error: Content is protected !!