Ranipet

News August 25, 2024

இராணிப்பேட்டையில் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்

image

விளையாட்டு துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் 6000 வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் செப் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் 17 வட்டார அளவிலான முகாம்களில் 3464 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 1765 பேருக்கு அடையாள அட்டைகள், 1124 பேருக்கு யூடிஐடி அடையாள அட்டைகள், 194 பேருக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, 126 பேருக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று ரூபாய் 9.30 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News August 25, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் நேரில் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, சோளிங்கர் வட்டம் வேலம் கிராமத்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வெங்கடேசன் என்ற விவசாயி தோட்டக்கலைத் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 இலட்சம் மானியத்தில் வெண்டைக்காய் பயிரிட்டுள்ளதை பார்வையிட்டு கேட்டறிந்தார். அப்போது, இணை இயக்குனர் வேளாண்மை (பொறுப்பு) செல்வராஜ் உடன் இருந்தார்.

News August 24, 2024

ராணிப்பேட்டை எஸ்பி ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குணசேகரன் (CWC), குமார் (CCW), துணை காவல் கண்காணிப்பாளர்கள் சந்திரலேகா, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். அரக்கோணம் உட்கோட்டத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் கலந்து கொண்டார்.

News August 24, 2024

குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு

image

நெமிலி அடுத்த மூலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் தினேஷ் (11) நெமிலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பும், மகள் சுப்ரியா (10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில், 2 பேரும் அங்குள்ள மீன் குட்டையில் நீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 24, 2024

வாலாஜாபேட்டை அருகே ஆற்றில் கிடந்த ஆண் சடலம்

image

வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு பாலாற்றில் இன்று (24-08-2024) காலை 11.30 மணி அளவில் அடையாளம் தெரியாத சுமார் 45 மதிக்கத்தக்க ஆண் சடலம் தண்ணீரில் மிதப்பதாக வாலாஜாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.

News August 24, 2024

சிறந்த நகராட்சியாக ராணிப்பேட்டை தேர்வானது எப்படி?

image

சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் 3-ஆவது சிறந்த நகராட்சியாக ராணிப்பேட்டை தோ்வு செய்யப்பட்டது. தூய்மைப் பணிகள் உடனுக்குடன் மேற்கொள்வது, முறையான வரி வசூல் , மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம், சுகாதார வசதிகள் வழங்குதல், தெரு விளக்குகளை முறையாக பராமரித்தல், பசுமை நகரம் பூங்காக்களை ஏற்படுத்துதல், மின் ஆளுமை திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.

News August 24, 2024

தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைத்த இளைஞர் கைது

image

ராணிப்பேட்டையில் கடந்த 17ஆம் தேதி முகுந்தராயபுரம் ரயில் தண்டவாளத்தில் இரும்புக் கம்பியை வைத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர். சரியான நேரத்தில் தண்டவாளத்தில் இருந்த இரும்பு கம்பி கண்டுபிடித்து அகற்றப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வாலாஜாவைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News August 24, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

மாநில அளவிலான நவராத்திரி கண்காட்சி செப்டம்பர் 21ம் தேதி முதல் அக். 6 ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடக்கிறது. ராணிப்பேட்டையை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அங்கு சந்தைப்படுத்தி விற்பனை செய்யலாம் விரும்புவோர் மதி பஜார் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்

News August 23, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

மாநில அளவிலான நவராத்திரி கண்காட்சி செப்டம்பர் 21ம் தேதி முதல் அக். 6 ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடக்கிறது. ராணிப்பேட்டையை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அங்கு சந்தைப்படுத்தி விற்பனை செய்யலாம் விரும்புவோர் மதி பஜார் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்

error: Content is protected !!