Ranipet

News August 28, 2024

ராணிப்பேட்டை அருகே 7 கடைகளுக்கு சீல் வைப்பு

image

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அரக்கோணம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படுகிறதா என்று உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் போலீசார் இணைந்து இன்று சோதனை நடத்தினர். இதில் 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூபாய் 25000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடரும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்

News August 28, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 28, 2024

ராணிப்பேட்டையில் ஆறு இடங்களில் மட்டுமே அனுமதி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை தண்டலம் ஏரி, புளியந்தாங்கல் ஏரி , ஆற்காட்டில் ஆற்காடு ஏரி, வேப்பூர் ஏரி, அரக்கோணத்தில் மங்கம்மாபேட்டை ஏரி, மாவேரி ஏரி ஆகிய ஆறு இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டும். போலீஸாருக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் விழா குழுவினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி நிலவரம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஓவர் சந்தை மார்க்கெட்டில் காய்கறி நிலவரம் உருளைக்கிழங்கு 1கிலோ ரூ.46 வரையிலும், தக்காளி ரூ.25 வரையிலும், கத்திரிக்காய் ரூ.36 முதல் ரூ.40 வரையிலும், சிறிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.55 வரையிலும், இஞ்சி ரூ. 180 வரையிலும், கேரட் ரூ. 70 வரையிலும், பூண்டு ரூ.260 முதல் ரூ.280 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

News August 28, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். இவைகள் மீது வேதியியல் கலந்த வர்ணம் பூசக்கூடாது. நீரில் கரையும் தன்மையுடைய விநாயகர் சிலைகளை மட்டும் உபயோகிக்க வேண்டும். 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் அமைக்க கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் அனுமதித்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

கோவை ரயில்கள் செப்.1 ல் காட்பாடி வரை மட்டுமே

image

அரக்கோணத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் கோவையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி (12680) எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 1ம் தேதி காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்பட வேண்டிய (12679) ரயில் காட்பாடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது

News August 28, 2024

ராணிப்பேட்டையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் வெளியே செல்லும்போது குடை, ரெயின் கோர்ட்டுடன் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News August 28, 2024

திருப்பதி மெமு ரயில் இரு நாட்களுக்கு முழுவதும் ரத்து

image

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9 .50 மணிக்கு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 28 , 29 ஆகிய இரு தேதிகளிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது . அதே போன்று திருப்பதியில் இருந்து மதியம் 1:25 மணிக்கு சென்னைக்கு இயக்கப்படும் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

News August 28, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இளைஞர் நீதி சட்டம் 2015 குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு குழந்தைகள் நல காவலர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.நிகழ்வில் பல்வேறு காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 27, 2024

ராணிப்பேட்டை அருகே மர்ம மரணம்

image

சோளிங்கர் தாலுகா புலிவலம் அடுத்த கட்டாரி குப்பம் கிராமத்தில் குவாரிக்கு செல்லும் வழியில் உள்ள குட்டை நீரில் இன்று மாலை பெண் ஒருவரது சடலம் மிதந்தது. இது குறித்து சோளிங்கர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்து கிடந்ததால், அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!