India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் தபேந்திரன், வேளாண்மை துணை இயக்குனர் செல்வராஜ், உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னிவேடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துள்ளானது. லாரியை முந்தி சென்ற கார் கவிழ்ந்த விபத்தில் காரில் பயணித்த அருணகிரி என்பவர் மூளை சிதறி பலியானார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 334 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சந்திரகலா மற்றும் சோளிங்கர் எம்.எல்.ஏ.முனிரத்தனம் ஆகியோர் வழங்கினர். இந்த முகாமில் பட்டா, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1,122 வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் சந்திரகலா வெளியிட்டார்.இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல், ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் வருவாய் கோட்ட லுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலகமான தாசில்தார் மற்றும் நக–ராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆற்காடு தாலுகா திமிரி பகுதியில் உள்ள ஏரியில் வண்டல் மண் அள்ளுவதற்கு வட்டாட்சியர் அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் ஏரியிலிருந்து அதிக அளவு மண்ணை எடுத்து வீட்டு மனை அமைய உள்ள இடத்திற்கு லாரிகளில் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து ஆற்காடு வட்டாட்சியர் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தி ஏரியில் வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்தினார்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சி.எஸ்.பி மஹாலில் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் கூட்டம் நாளை 30ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். எனவே செயல் வீரர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.

அரக்கோணம் பழனிபேட்டை பகுதியில் ரயில்வே இரட்டைக்கண் சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இங்கு மழை நீர் மற்றும் சேறும் சகதியும் கலந்து தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த சுரங்கப்பாதையை சீரமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்காளம்மன் கோயில் அருகில் செப். 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம நடைபெறும் என்று எம்எல்ஏ ரவி இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டையில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காற்று 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று திருப்பதியில் இருந்து மதியம் 1:25 மணிக்கு சென்னைக்கு இயக்கப்படும் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் சுய தொழில் செய்வோர் தனி நபர்கள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் முன்னேற்றங்கள் மற்றும் வங்கியில் எத்தனை பேருக்கு கடன் தரப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
Sorry, no posts matched your criteria.