India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொங்கல் பண்டிகைக்கு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கும் வேட்டி சேலை முழுவதும் விசைத்தறி நெசவாளிடமிருந்து வாங்கி இருப்பதாகவும், இதனால் கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் வேலை இழப்பார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் காந்தி 46.43 லட்சம் சேலைகளும் 20.86 லட்சம் வேட்டிகளும் கைத்தறி நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.

நெமிலி தாலுகா பன்னியூர் கிராம எல்லையில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் விழுந்து கிடந்தார். அந்த வழியாக ரோந்து பணியில் சென்ற பாணாவரம் போலீசார் வாலிபரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார் .போலீஸ் விசாரணையில் கீழ் வீராணம் மோட்டூரை சேர்ந்த வேலு என்பது தெரிந்தது. இவர் எப்படி இறந்தார் என பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டையில் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டி செப் 3 காலை 10 மணியளவில் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மாணவர்களுக்கும், தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி செப் 4 காலை 10 மணியளவில் பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணியளவில் கல்லூரி மாணவர்களுக்கும் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நெமிலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை (ம) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சந்தானம், சர்மாமூர்த்தி, சிவா, ராஜசேகர், பரசுராமன், அஜித் உள்ளிட்ட 7 நபர்களுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.5,000 அபராதம் விதித்து தாழ்த்தப்பட்டோர் (ம) பழங்குடியினர் நேற்று தீர்ப்பளித்தது. இதில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி கிரண்ஸ்ருதி பாராட்டு தெரிவித்தார்.

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நேற்று வாலிபர் ஒருவர் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து டவுன் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில், அரக்கோணம் மதுரைப்பிள்ளை தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது.

காவேரிப்பாக்கம் அருகே உள்ள கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி, மாமியார் கொள்ளாபுரி. இவர்களுக்கிடையே நேற்று வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆவேசமடைந்த ஜெகதீஸ்வரி மாமியாரை காய் அரியும் கத்தியால் கழுத்து மற்றும் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த கொள்ளாபுரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்வரியை கைது செய்தனர்.

ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் சர்வதேச இயக்கம் (IIMUN) 2024 – தொடக்க விழா ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள ஜிகே உலக பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A போட்டித்தேர்விற்கான மாதிரி தேர்வு நாளை 31.08.2024 காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்ட திராவிட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h)பிரிவு விளக்க பொதுக்கூட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் செப் 2ம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. திராவிட கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி, மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் சிறப்புரையாற்றுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி செப்.7ஆம் தேதி கொண்டாடப்ப உள்ளது. இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மற்றும் துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.