India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <
மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற உள்ளது. இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பொது பிரச்னைகளை கோரிக்கையாகவும், தனிநபர் பிரச்னைகளை மனுக்களாகவும் அளிக்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெப்ப அலை பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. தமிழகத்தில் வெப்ப அலை பரவல் எதிரொலியாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா அறிவுரை வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ரமலான் திருநாளை முன்னிட்டு சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக போத்தனூர் வரை செல்லும் சிறப்பு ரயில் (06027) மார்ச் 30 இரவு 11.30 க்கு சென்னையில் இருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் போத்தனூரிலிருந்து சென்னைக்கு (06028) மார்ச்.31 காலை 8.20 க்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வெப்ப அலை பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை கமாண்டர் கபில், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ரூபி பாய் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று (19.03.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமில் ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகளையும், அங்கு பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், வணிக வளாகங்களுடன் கூடிய ஆற்காடு தினசரி சந்தை கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்.21) இந்த <
ராணிப்பேட்டை தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும், குறிப்பாக தோல் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள், காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்களின் பெரிய இராணுவத்தளமாகவும் இருந்துள்ளது. ராஜா தேசிங்கின் மனைவி ராணிபாயின் நினைவாகத்தான் ராணிப்பேட்டை என்ற பெயர் வந்ததாக அறியப்படுகிறது. இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்.
காவேரிப்பாக்கம் அருகே உள்ள அவளூரை சேர்ந்தவர் விவசாயி முனுசாமி (65).இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.முதல் மனைவியின் மகனான விநாயகத்துடன் (45) சொத்து தகராறு நீடித்து வந்தது. நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தில், விநாயகம் தந்தையை கட்டையால் தாக்கி உள்ளார்.பலத்த காயமடைந்த முனுசாமி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.அவளூர் போலீசார் வழக்குப்பதிந்து விநாயகத்தை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.