India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
ராணிப்பேட்டையில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் மாதத்தின் இறுதி தொடங்கி மே மாதத்தில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்களுக்கு அசெளகரியமான சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை உங்க ஊர் மக்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை <
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கிருஷ்ணகுமாரை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கடந்த 2021ஆம் ஆண்டு, விரலை வெட்டியதற்காக பழிக்குப் பழியாக உயிரை வாங்கியது விசாரணையில் அம்பலம். 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது விரலை வெட்டிய பாஜக நிர்வாகியை, அதே நாளில் வெட்டி கொலை செய்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை, துறையூரை சேர்ந்த கட்டட கான்ட்ராக்டர் பழனி (52).இவரது மனைவி செல்வி (50) கடந்தாண்டு மார்ச் 5ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.தனக்கு சொந்தமான நிலத்தில் மனைவியை அடக்கம் செய்து,அவருக்கு சமாதி கட்டினார்.மனைவி இருக்கும் போது வீடு கட்ட ஆசைப்பட்ட அவர், இப்பொழுது மனைவியின் சமாதி, வீட்டுக்குள் அமையுமாறு வடிவமைத்து வீடு கட்டினார்.மனைவி இறந்த நாளான மார்ச் 5ல் கிரஹபிரவேஷம் செய்தார்.
முதியோர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத இடர்பாடுகளை போக்கிடவும், உதவிடவும் துரிதமாக உதவிகளை கிடைத்திட காவல்துறை சீனியர் சிட்டிசன் ஹெல்ப் லைன் எண் 14567 என்ற எண்ணை அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பேச்சுலர் அல்லது டிப்ளமோ என் டெலி கம்யூனிகேஷன் கல்வித் தகுதி உள்ள ஐந்து வருடங்கள் பணி அனுபவம் உள்ள ஆண்கள் சவுதி அரேபியாவில் பணி செய்ய விருப்பமிருந்தால் அரசு துறை மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள புகைப்படத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
பனப்பாக்கம் அடுத்த துறையூரைச் சேர்ந்த பழனி என்பவர் தனது இறந்த மனைவி மீது கொண்ட அன்பின் காரணமாக வீட்டினுள் மனைவிக்குச் சமாதி அமைத்து அங்கு வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு உடல்நிலை குறைவால் அவரது மனைவி இறந்துவிட்டார். மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல், வீட்டின் உள்ளே மனைவிக்கென சமாதி எழுப்பியுள்ளார் பழனி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராணிப்பேட்டை ரெண்டாடி அருகே உள்ள விவசாய நிலத்தில் ரவுடி சீனிவாசன் என்கிற கிருஷ்ணகுமாரை நேற்று (மார்.8) மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. வயல்வெளியில் மறைந்திருந்த அந்த மர்ம கும்பல், சீனிவாசனை தாக்கி ஓட ஓட விரட்டி உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. உயிரிழந்த சீனிவாசன் வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஆவார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.