Ranipet

News May 7, 2025

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

image

பாணாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது மகன் நிஷாந்த் (6). இவரது உறவினர் ஆற்காட்டைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவரது மகன் வீரவேல் (8), கோடை விடுமுறையை முன்னிட்டு நிஷாந்த் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று சூரைக்குளம் ஏரியில் குளிக்க இருவரும் சென்றனர். அப்போது மீன்களைப் பார்க்க தண்ணீரில் இறங்கியபோது, ஆழமான பகுதிக்கு தண்ணீர் இழுத்து சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

News May 7, 2025

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

image

பாணாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது மகன் நிஷாந்த் (6). இவரது உறவினர் ஆற்காட்டைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவரது மகன் வீரவேல் (8), கோடை விடுமுறையை முன்னிட்டு நிஷாந்த் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று சூரைக்குளம் ஏரியில் குளிக்க இருவரும் சென்றனர். அப்போது மீன்களைப் பார்க்க தண்ணீரில் இறங்கியபோது, ஆழமான பகுதிக்கு தண்ணீர் இழுத்து சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

News May 7, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News May 7, 2025

ராணிப்பேட்டையில் துணை வட்டாட்சியர்கள் 10 பேர் மாற்றம்

image

ராணிப்பேட்டையில் இன்று 10 துணை வட்டாட்சியர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வெளியிட்டுள்ளார். அதன் படி ப.ரகு தனித்துணை வடச்சியராகவும், ஆர். செல்வி (இ பிரிவு) தலைமை உதவியாளராகவும், சே.வீரராகவன் (எச் பிரிவு )தலைமை உதவியாளராகவும் இன்னும் மேலும் 7பேருக்கு இன்று பணியிட மாற்றங்கள் அறிவிக்கபட்டுள்ளது.

News May 7, 2025

ராணிப்பேட்டையில் தீராத பிரச்னைகளை தீர்க்க வழி இங்கே

image

ராணிப்பேட்டை அருகே காவேரிபாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில் சுமார் 700ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தினந்தோறும் 108அல்லது 1008தடவை பக்திஸ்ரத்தையுடன் சொல்லி பூஜித்து வருபவர்களுக்கு துன்பங்கள் அகன்று நன்மைகள் பெருகும். இந்த கோயிலில் தரிசித்தால் தீராமல் இருக்கும் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. பிரச்னைகள் அதிகமாய் இருக்கும் நண்பர்களுக்கு இதை பகிரவும்.

News May 7, 2025

ராணிப்பேட்டையில் தீராத பிரச்னைகளை தீர்க்க வழி இங்கே

image

ராணிப்பேட்டை அருகே காவேரிபாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில் சுமார் 700ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தினந்தோறும் 108அல்லது 1008தடவை பக்திஸ்ரத்தையுடன் சொல்லி பூஜித்து வருபவர்களுக்கு துன்பங்கள் அகன்று நன்மைகள் பெருகும். இந்த கோயிலில் தரிசித்தால் தீராமல் இருக்கும் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. பிரச்னைகள் அதிகமாய் இருக்கும் நண்பர்களுக்கு இதை பகிரவும்.

News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News May 7, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

30 ஏப்ரல் 2025 அன்று, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வலுவான கடவுச்சொல் பயன்படுத்துவது உங்கள் தரவுக்கான ‘டிஜிட்டல் சீட் பெல்ட்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. “உங்கள் தரவு, உங்கள் பொறுப்பு” என்ற குறிப்புடன், இணைய பாதுகாப்பில் கடவுச்சொல் முக்கியத்துவத்தை விளக்கும் இந்த விழிப்புணர்வு மக்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.

News May 7, 2025

ராணிப்பேட்டை: காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவி சட்ட வழக்குரைஞர் (2), அலுவலக உதவியாளர் (3) ஆகிய காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை 07.05.2025 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட நீதிபதிக்கு அனுப்ப வேண்டும் எனவும், நேர்காணல் 12.05.2025 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

ராணிப்பேட்டை: அடிப்படை பிரச்சனையா கவலை வேண்டாம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!