India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு ராணிப்பேட்டையிலிருந்து நான்கு பேர் தேர்வாகியுள்ளனர். அரசினர் ஆதி திராவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரஜினி பிரியா, அரக்கோணம் அரசினர் உயர்நிலை பள்ளி ஆசிரியர் கௌரி, விஆர்வி பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் சதீஷ் பானர்ஜி, ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஜானகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், மண்டல அளவில் தடகளப் போட்டிகள் வாலாஜா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று நடைபெறுகிறது. விளையாட்டு போட்டியில் 11 மாவட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள் வரும் 20ம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று ராணிப்பேட்டை மாவட்டம் உடற்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அரக்கோணம் – காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை பள்ளூரில் திருப்பதியில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த தனியார் கம்பெனி பேருந்து மீது இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த சுமதி, சண்முகசுந்தரம், பாக்யராஜ், கிஷோர் குமார் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-2 & 2A போட்டித்தேர்விற்கான தமிழ்த்தேர்வு (100-கேள்விகள்) 04.09.2024 புதன்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 01.00 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. தேர்வாளர்கள் போட்டித்தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 7:55, 10:55 நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் இரவு 10:20-க்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. இரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று தலங்கை ரயில் நிலையம் அருகில் வரும்போது திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஷாவை சேர்ந்த திலீப் ராவத்(28) என்பவரை கைது செய்தனர். கஞ்சாவை அவர் திருப்பூருக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. யாருக்கு கடத்தி செல்கிறார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் செப். 15 முதல் 6 நாள்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளன்று அவரின் சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். துணைப் பொதுச்செயலா் கே.பி.முனுசாமி ராணிப்பேட்டையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று பள்ளி, கல்லூரிகளில் பாலியல் பிரச்சனைகள் தடுப்பது குறித்து அனைத்து பள்ளி கல்வி நிறுவன முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்து கொண்டார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசின் அரசு முதன்மைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று பள்ளி கல்லூரிகளில் பாலியல் பிரச்சனைகள் தடுப்பது குறித்து அனைத்து பள்ளி கல்வி நிறுவன முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்து கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சோளிங்கர் கோட்டம் மேல் வெங்கடாபுரம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேல்வெங்கடாபுரம், கொடைக்கல், ரெண்டாடி, நீலகண்டராயன்பேட்டை, ஜம்பு குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (செப்டம்பர் – 3) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.