Ranipet

News September 17, 2024

அரக்கோணத்தில் சோதனை இல்லை; அதிகாரிகள் நிம்மதி

image

தமிழக முழுவதும் நேற்று ஒரே நாளில் 30 சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எந்த நேரத்திலும் வரலாம் என்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயந்திருந்தனர். அதே நேரம் இரவு 10 மணி ஆகியும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வரவில்லை. இதனால் அதிகாரிகள் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

News September 16, 2024

ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு 2 கோடியே 50 லட்சம் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 தொழில் கூடங்களுடன் 2 ஏக்கர் நிலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

News September 16, 2024

ராணிப்பேட்டையில் குறைத்தீர் கூட்டம்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News September 16, 2024

ராணிப்பேட்டையில் இன்று மாலை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் இன்று 16-09-2024 மாலை 6 மணி அளவில் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் தலைமையில் நடைபெற உள்ளது இதில் அதிமுக கழக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனிசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்.

News September 16, 2024

ராணிப்பேட்டை அருகே 6 பேருக்கு வெட்டு

image

சோளிங்கர் தாலுகா பனவட்டாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சேட்டு, பச்சையப்பன். இவர்களுக்கு நிலத்தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு பச்சையப்பன் ஆதரவாளர்கள் குணவதி, சாந்தி, விஜயகுமார், வெங்கடேசன், பழனி, கோமதி 6 பேரை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் வெட்டினர் . 6 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

News September 16, 2024

ராணிப்பேட்டையில் புதிய கார் உற்பத்தி ஆலை

image

ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள டாடா மோட்டார் ஜாக்குவார் நிறுவனத்தின் மூலமாக வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலமாக சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News September 16, 2024

ராணிப்பேட்டை பெற்றோர்களுக்கு பரிசு: ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் Selfie with daughters என்ற நிகழ்வு நடைபெறுகிறது.பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளுடன் செல்பி எடுத்த புகைப்படத்துடன் ஒரு சிறந்த வாசகத்தை எழுதி மாவட்ட சமூக நல அலுவலர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.சிறந்த புகைப்படம் மற்றும் வாசகங்களுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News September 16, 2024

ராணிப்பேட்டையில் ஊட்டசத்து மாதம்; ஆட்சியர் தொடங்கி வைப்பு

image

ராணிப்பேட்டை பாரதி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து உணவு கண்காட்சி அரங்கு மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று காலை 9.45 மணி அளவில் நடைபெற உள்ளது

News September 16, 2024

ராணிப்பேட்டை என்ற பெயர் உருவான வரலாறு

image

ஆற்காட்டை தலைமையிடமாக கொண்டு நவாப் சதயத் உல்லாகான் ஆட்சி புரிந்தார். 1700-ஆம் ஆண்டு செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜா நவாப்களுக்கு கப்பம் கட்ட மறுத்ததால் போர் மூண்டது. இதில் தேசிங்கு ராஜா வீரமரணமடைந்தார்.தேசிங்கு ராஜா மனைவி ராணி பாய் மனைவி உடன்கட்டை ஏறி தன்னுயிரை மாய்த்து கொண்டார் . நவாப் இவர்களின் அஸ்தியை பாலாற்றங்கரையில் கரைத்து அங்கு நினைவிடம் எழுப்பினார். அதற்கு ராணிப்பேட்டை என்று பெயர் வைத்தார்.

News September 15, 2024

அதிமுகவில் இணைந்த பாமக நிர்வாகிகள்

image

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் கோபிநாத் அவர்கள் ஏற்பாட்டின் பேரில், ஆற்காடு மேற்கு ஒன்றியம் கீழ்மின்னல் ஊராட்சி 9-வது வார்டு கவுன்சிலர் விஜய் குமார் அவர்கள் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாமகவில் இருந்து விலகி இன்று மாவட்ட கழக செயலாளர் சுகுமார் அவர்களின் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

error: Content is protected !!