India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஜூலை 5 மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது நிலையில், நேற்று (ஜூலை 4) இரவு ரத்து செய்யப்பட்டது.
அரக்கோணம் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள காரணத்தால், இன்றை தினம் ஜூலை 5 சனிக்கிழமை தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கான “அன்புச் சோலை” மையங்கள் அமைக்க தகுதியான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துருவின் 2 நகல்களை வரும் ஜூலை 7க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உபயோகம் உள்ளவர்களுக்கு பகிரவும்.
இராணிப்பேட்ட மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (04/07/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.
உயர்கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி, இடைப்பாலினர்களுக்கு, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் திருநங்கையர் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து பயன்பெறலாம் என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <
காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்) புகைப்படங்கள் தேவை.
+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க
பள்ளூரில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது இங்கு நேற்று இரவு கோவிந்தவாடி அகரத்தைச் சேர்ந்த கோவர்தனன், பள்ளூரை சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் இடையே போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வராஜை கோவர்தனன் கை, கட்டையால் தாக்கினார். காயமடைந்த செல்வராஜ் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து இன்று கோவர்த்தனனை கைது செய்தனர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மே-1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்(SP)விவேகானந்த சுக்லா – 9498100660, ADSP சரவணன் – 9840773352, ADSP குணசேகரன்- 9443417831, ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) இமயவரம்பன் – 9498230141, அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) ஜாபர் சித்திக்- 9650665056. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
Sorry, no posts matched your criteria.