India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மார்ச் 23 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. வாழைபந்தல் வாலாஜா கொண்டபாளையம் அவளூர் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100
ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் அருகே இன்று(மார்.23) ராணிப்பேட்டை மாவட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஓய்வு ஊதிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க
ராணிப்பேட்டையில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்
ராணிப்பேட்டையில் சுமார் 400 ஆண்டுகள் முன்பு ஆற்காடு நவாப்களின் தேவைக்காக பிரம்பின் மூலம் அறைகலன்கள் (நாற்காலி,மேசை) மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு வாலாஜா பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. சில குடும்பங்கள் மட்டும் ஈடுபட்ட இந்த தயாரிப்பில் தற்பொழுது பலரும் பயிற்ச்சி பெற்று ஈடுபட்டு வருகின்றனர். கதர் வாரியத்தின் கீழ் பதிவு பெற்ற சங்கத்தின் மூலமாக இந்த தொழில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
அரக்கோணம் பிடிஓ பிரபாகரன் வாலாஜா கிராம ஊராட்சி பிடிஓவாகவும் அங்கு பணியாற்றிய சிவகுமார் நெமிலி கிராம பிடிஓவாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று சோளிங்கர் பிடிஓ கிராம ஊராட்சி சித்ரா கலெக்டர் அலுவலக உதவி இயக்குனர் கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று மாவட்டம் முழுவதும் 8 பிடிஓக்களை பணியிடம் மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (மார்ச் 23ஆம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை ஊரக வளர்ச்சி ஆணையரக உத்தரவின்படி கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 29ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று ஆட்சியர் சந்திரகலா நேற்று தெரிவித்துள்ளார்.
அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் இருப்புப் பாதையில் புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இன்று(மார்.21) மாலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் டெக்னிகல் பிரிவு ஊழியர்கள் அதிகாரிகள் அங்கு சென்று சிக்னல் கோளாறு சரி செய்தனர். இதனால் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் 30 நிமிடம் கால தாமதமாக சென்றது.
இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று(மார்.21) வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையில் இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை (22.03.2025) முழு வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுவதாகவும், புதன் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.