India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<

அரக்கோணம், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார், தன்வீர் & சின்டுயாதவ் என்ற பெண் ஆகியோர் மத்திய காவலர் பணியில் சேர தேர்வாகினர். மூவரும், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், ஜனவரியில் பயிற்சியில் சேர்ந்தனர். இவர்கள் சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆய்வு செய்தபோது, அவை போலி என தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் & அரசு ஊழியர் அமைப்பின் கூட்டு நடவடிக்கை கவுன்சில் (ஜாக்டோ-ஜியோ) அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும் எனவும், மேலும் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலேரி ஊராட்சிக்குட்பட்ட அரசங்குப்பத்தில் நேற்று (அக்.16) தனியார் பள்ளி பேருந்தும் எதிரே வந்த மினி வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த மாணவ மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து டிரைவருக்கு சிறிது காயம் ஏற்பட்டு, அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி நாளை அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் <

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு சைபர் குற்றச்செயல்களை தவிர்க்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியப்படாத தொலைபேசி அழைப்புகள், செய்திகள் அல்லது இணைய தளங்களின் வழியாக பணம் கோரும் நபர்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது. ஏதேனும் சந்தேகமான செயல்கள் ஏற்பட்டால் உடனே 1930 என்ற எண்னில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறதா? அதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இப்போதே உங்கள் போனில் தமிழக அரசின் ‘நம்ம சாலை’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் புகாரை புகைப்படத்துடன் பதிவிட்டால் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சூப்பரான தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.