India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் R.காந்தி
அவர்கள் தொழிலதிபர்களை நேரில் சந்தித்து ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து, இந்திய கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் பலர் உடன் இருந்தனர்.
வாலாஜா தாலுகா அம்மூர் ரோடு சார் பதிவாளர் அலுவலகம் அருகில் நிலை கண்காணிப்பு குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2 லட்சம் கொண்டு செல்லப்பட்டு தெரிந்தது. நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து வாலாஜா தலைமையிடத்து துணை வட்டாட்சியர் குமாரிடம் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி இன்று நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போலீசார் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தார். துணை காவல் கண்காணிப்பாளர்கள் சரவணன், குமரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை, கலவை பேருந்து நிலையத்தில் திரைப்பட நடிகர் வாசு விக்ரம் திமுக அரக்கோணம் மக்களவை தேர்தல் வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சார நிகழ்வில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 1122 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பேனா, பென்சில் , கவர் சீல் என மொத்தம் 127 பொருட்கள் அனைத்தும் தயார் படுத்தப்பட்டு 90% சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் வாகன சோதனைகளில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஒரு கோடியே 32 லட்சத்து 4500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பட்டு வேட்டி துண்டுகள் மற்றும் ரொக்க பணம் அடங்கும். உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
வாலாஜா, அம்மூர் கூட்ரோடு நேதாஜி தெருவைச் சேர்ந்தவ சுரேஷ் என்பவரின் மனைவி அனிதா (36). இவர் நேற்று மாலை வாலாஜா ரோடு பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காட்பாடி ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை: வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்.18 (ம) வாக்குப் பதிவு நாளான ஏப்.19 ஆகிய இரு நாட்களில் அரசியல் கட்சிகளோ, வேட்பாளா்களோ, அல்லது தனியாா் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ, மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதியின்றி தோ்தல் சம்பந்தமான விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப்.18 மற்றும் வாக்குப் பதிவு நாளான ஏப்.19 ஆகிய இரு நாட்களில் அரசியல் கட்சிகளோ , வேட்பாளா்களோ , அல்லது தனியாா் அமைப்புகளோ மற்றும் தனி நபரோ, மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதியின்றி தோ்தல் சம்பந்தமான விளம்பரங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. இந்த பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.