India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்கள் பழுதடைந்திருப்பின் அதற்கு பதிலாக புதிய வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். தங்களது விண்ணப்பங்களை பூா்த்தி செய்து தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் 2 புகைப்படங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ, தபாலிலோ அக்.5ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ராணிப்பேட்டையில் இன்று (24.9.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் கவர்ந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கு (9884098100) அழைக்கலாம்.

ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பஜ்ரங்கி மண்டல் 22 என்ற வாலிபர் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய் தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பஜ்ரங்கி மண்டல் கொரோனா தொற்றால் இறந்துவிட்டதாக சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வாலிபரின் உடல் வேலூர் மின் மயானத்தில் தகனம் செய்ய எடுத்து செல்லப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப.. அவர்கள் இன்று (24.09.2024) அரக்கோணம் இரயில் நிலையம் அருகே பழனிபேட்டை சாலையில் உள்ள இரட்டைக் கண் வாராவதி தரைப்பாலத்தில் மழை நீர் தேங்குவதைக் கண்டு சித்தேரி அம்பேத்கார் நகர் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, நகரமன்ற தலைவர் லஷ்மி பாரி ஆகியோர் உடனிருந்தனர்.

அனைத்து மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நிலுவைகள் குறித்து தமிழக அரசின் அரசு முதன்மைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரலையில் கலந்து கொண்டார். மாவட்ட அலுவலர் சுரேஷ் மற்றும் துறைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (24.9.24) காலை முதலே வெயில் வெளுத்து வாங்கியது. இதனால் வெப்ப காற்று வீசியது. இந்த நிலையில், திடீரென்று மேகமூட்டங்கள் கலைந்து கலவை, திமிரி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், அம்மூர், கல்மேல்குப்பம், வேலம், சோளிங்கர் ஆகிய சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

ராணிப்பேட்டையில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து வருவதால், அது இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆற்காடு சட்டமன்ற தொகுதி திமிரி கிழக்கு ஒன்றியம் சார்பில் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அதிமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார் தெரிவித்துள்ளார்

பனப்பாக்கத்தில், ‘டாடா மோட்டார்ஸ்’ அமைக்க உள்ள கார் தொழிற்சாலைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்.28ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். ‘சிப்காட்’ தொழில் பூங்காவில் ஆலை அமைக்க, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, 470 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில், ‘ஜாகுவார் லேண்ட் ரோவர்’ கார்களை, டாடா மோட்டார்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.