India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை அரக்கோணம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பணியில் மாவட்ட SP கிரண் ஸ்ருதி தலைமையில் 3 கூடுதல் SP மேற்பார்வையில், 6 துணை SP, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உட்பட 986 காவல்துறையினரும், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 282 TSP காவலர்களும், 413 ஓய்வுபெற்ற ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
அரக்கோணம் மக்களவைத் தேர்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிய உள்ள அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்வு நேற்று(ஏப்.17) நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
வருகின்ற 19தேதி அரக்கோணம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சியினரோ, வேட்பாளரோ தேர்தல் பிரச்சாரம் ஒலிபெருக்கியின் வாயிலாகவோ, நேரடியாகவோ மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாகவே மேற்கொண்டாலோ அல்லது பதிவு செய்தாலோ காவல்துறை மூலம் தேர்தல் நடத்தை விதி மீறியதாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட SP கிரண்ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
வாலாஜா தாலுகா அம்மணந்தாங்கல் கிராமத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் பெட்ரோல் பங்க் அருகில் இன்று மதியம் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார் . அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்தார். வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாணாவரத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் மகள் பாணாவரம் அரசு பள்ளியில் +2 படித்து வந்தார். இவரை பழையபாளையம் பகுதியை சேர்ந்த அப்பு(19) கிண்டல் செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மாணவியின் தந்தை ஏழுமலை, அண்ணன் சூரியை, அப்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 10ம் தேதி கத்தியால் வெட்டியுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அப்பு மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை நேற்று முன்தினம் பாணாவரம் போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்களின் சோதனைகள் மூலம் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.1,37,18,560 பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேற்று தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு முரணாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை எந்த அரசியல் கட்சியினரோ வேட்பாளரோ விநியோகிப்பது கண்டறியப்பட்டால், இது குறித்த தகவலினை மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04172-273190 / 273191 / 273192 / 273193 / 1950 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
வாலாஜா தாலுகா வள்ளுவம்பாக்கம் அடுத்த ஈச்சம்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(26). இவர் நேற்று(ஏப்.15) காவேரிப்பாக்கம் ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாதால் அவரது உறவினர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று(ஏப்.16) காலை முதல் தீயணைப்பு துறையினர், ஏரியில் கோபியை தேடி வருகின்றனர். கோபிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அளிக்காத தனியாா் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி எச்சரித்துள்ளார். இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண். 18004257015 04172 -273190, 04172-273191, 04172-273192, 04172 -273193 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு மக்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.