Ranipet

News October 18, 2025

ராணிப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (அக்.17) விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் மாத அரிசியை, ரேஷன் கடைகளில் வாங்க இயலாதவர்கள் அக்டோபர் மாதமே பெற்றுக் கொள்ளலாம். அதே நேரம் நவம்பர் மாதம் வாங்க விரும்பினாலும் அந்த மாதம் வாங்கலாம். மேலும் அரிசி மட்டுமே இப்படி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (அக்-17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், தங்களது உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2025

ராணிப்பேட்டை: டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் போராட்டம்

image

அம்பரிஷிபுரம் ஊராட்சி ஜடேரி அருந்ததி பாளையம் பகுதியில் டாஸ்மாக் அரசு மது கடை இயங்கி வந்தது. இந்த கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் இன்று அக்டோபர் 17ம் தேதி கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைதொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவின் பேரில் கடையில் இருந்த அனைத்து மது பாட்டில்களும் வேறு கடைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

News October 17, 2025

ராணிப்பேட்டை: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

image

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.57,700 – ரூ.1,82,400 வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய<> இந்த லிங்கில்<<>> சென்று இன்று- அக்.17 முதல் நவ-10, வரை விண்ணப்பிக்கலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News October 17, 2025

ராணிப்பேட்டை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

ராணிப்பேட்டை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News October 17, 2025

ராணிப்பேட்டை: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <>விண்ணப்பிக்கலாம். <<>>விண்ணப்பிக்க அக்-18 கடைசித் தேதி. நேரடித் தேர்வு/நேர்காணல் இல்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 17, 2025

ராணிப்பேட்டை: 10th போதும், மத்திய அரசில் வேலை!

image

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி அக்.23. ஷேர் பண்ணுங்க.

News October 17, 2025

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பிசியோதெரபிஸ்ட், உளவியல் வல்லுநர் உள்ளிட்ட பல பணிகளுக்கு 13 நபர்கள் ரூ.25 ஆயிரம் சம்பளம் மற்றும் பயணப்படி அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தகுதியுடைய நபர்கள் ranipetdorcasjobs@gmail.com/www.dorcas.org.in என்கின்ற இணையதளம் வாயிலாக வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 9884256240, 9994259813 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்

News October 17, 2025

ராணிப்பேட்டை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<> இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 17, 2025

அரக்கோணம்: போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மூவர்!

image

அரக்கோணம், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார், தன்வீர் & சின்டுயாதவ் என்ற பெண் ஆகியோர் மத்திய காவலர் பணியில் சேர தேர்வாகினர். மூவரும், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், ஜனவரியில் பயிற்சியில் சேர்ந்தனர். இவர்கள் சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆய்வு செய்தபோது, அவை போலி என தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!