Ranipet

News October 6, 2024

ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

image

திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பால் மற்றும் அத்தியாவச பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும், இதனை அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் வரும் 8-ஆம் தேதி அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அரக்கோணம் ரவி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

News October 6, 2024

ராணிப்பேட்டையில் இன்றைய காய்கறி நிலவரம்

image

ராணிப்பேட்டை காய்கறி சந்தையில் தக்காளி ரூ.60-70, கத்திரிக்காய் ரூ.30-35, வெண்டைக்காய் ரூ.20, பீன்ஸ் ரூ.70-80, புடலங்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.25-30, சுரைக்காய் ரூ.15-20, பூசணிக்காய் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.40, கேரட் ரூ.30-35, முள்ளங்கி ரூ.30, வெங்காயம் ரூ.60-70, சின்ன வெங்காயம் ரூ.70, இஞ்சி ரூ.150-200, பூண்டு ரூ.350-400, புதினா ரூ.10, என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

News October 5, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (05.10.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News October 5, 2024

ராணிப்பேட்டையில் தீவிர வாகன சோதனை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திருமால் தலைமையிலும், அரக்கோணம் உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலும் தீவிர வாகன சோதனை மற்றும் இருசக்கர வாகனம் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்

News October 5, 2024

ரூ.7.81 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் பகுதியில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றி வந்த செயலாளர் சங்கர், எழுத்தாளர் பாரதி ஆகிய இருவரும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.7.81 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News October 5, 2024

அரக்கோண்டத்தில் கவாச் தொழில்நுட்பம்

image

சென்னை -அரக்கோணம், அரக்கோணம் -ரேணிகுண்டா உள்ளிட்ட வழித்தடங்களில் 271 கி.மீ. தொலைவுக்கு கவாச் தொழில்நுட்பத்தை செயல்படுத்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. கவாச் தொழில்நுட்பம் என்பது ரயில் ஓட்டுநர்களுக்கு ரயில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பம் ஆகும். ரயில் இன்ஜின், ரயில் பாதை, சிக்னல் என மூன்றையும் இணைத்து பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதுதான் கவாச் தொழில்நுட்பம்.

News October 5, 2024

ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் அக்.15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல் ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று இரவு முழுவதும் விடியவிடிய ராணிப்பேட்டையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

News October 4, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (04.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News October 4, 2024

ராணிப்பேட்டையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

image

ஆசிரியர் வேணுகோபால் சதுரங்க அகடாமி மற்றும் நெமிலி வட்டம் சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான வயது மற்றும் பொது பிரிவு செஸ் போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (06-10-2024) காவேரிப்பாக்கம் V.M.குப்புசாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9361452828 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

News October 4, 2024

ரயிலில் அரிசி கடத்திய இரு பெண்கள் கைது

image

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் விரைவு மின்சார ரயிலில் அரக்கோணம் ரயில்வே எஸ்ஐ ராமகிருஷ்ணன் ஏட்டு அருள் ஆகியோர் இன்று திடீர் சோதனை நடத்தினர் அப்போது ரயிலின் சீட்டுக்கு கீழே 12 பைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்திய திருத்தணியைச் சேர்ந்த வசந்தா 65 ஜெயகாந்தா 52 ஆகியோரை இன்று கைது செய்தனர் பறிமுதல் செய்த அரிசி மூட்டைகள நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!