India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று(ஜூன் 10) திறக்கப்பட்டது . வாலாஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
கலவை வட்டாட்சியராக பணியாற்றி வந்த ஜெயப்பிரகாஷ் நெமிலி வட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணியாற்றிவந்த சுரேஷை கலவை வட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நெமிலி வட்டாட்சியராக பணியாற்றிய பாலச்சந்தர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறுவட்ட வாரியாக 18 சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் இந்த சிறப்பு முகாம் 11.06.2024 5 23.07.2024 வரை நடைபெரும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளில் 11,51,209 வாக்குகள் செல்லத்தக்கவை. இதில் 1/6 வாக்குகளுக்கு மேல் 1,91,868 வாக்குகள் பெற்ற திமுக, அதிமுக, பாமக வேட்பாளர்கள் மற்றும் வேட்பு மனுவை திரும்ப பெற்றவர்கள், வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் என்று மொத்தம் 11 பேர் டெபாசிட் தொகை ரூ. 25 ஆயிரம் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 10ஆம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூன் 13ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை , அரக்கோணம் ஐடிஐ அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. குறிப்பாக வாலாஜாவில் 132.6 மில்லி மீட்டர் மழையும், அரக்கோணத்தில் 74.5 மில்லி. மீ மழையும் பதிவானது .
அது மட்டும் இன்றி பல்வேறு ஊர்களிலும் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 508.1 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடந்த இரு நாட்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன் , சுய உதவிக்குழு கடன், சிறு தொழில் கடன், கைவினை கலைஞர் கடன், கல்வி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் தேவைப்படுவோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் தரலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்
அரக்கோணம் அருகே டிராக்டர் ஒன்று நேற்றிரவு பழுதாகி நின்று கொண்டிருந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த ஷேர் ஆட்டோ இருட்டில் தடுமாறி டிராக்டர் மீது மோதியது . இதில் ஆட்டோ டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் ஆட்டோ டிரைவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை, சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சாமி திருக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வாராந்திர ஆண்டாள் புறப்பாடு உற்சவம் இன்று நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Sorry, no posts matched your criteria.