Ranipet

News October 9, 2024

ராணிப்பேட்டையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்டம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்டோபர் 9) ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தைத் தூய்மையாக பராமரிக்கும் தலைமையாசிரியருக்கு வாழ்த்து கூறினார். பள்ளி மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

News October 9, 2024

ராணிப்பேட்டை போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி அறிவுறுத்தலின்படி மாவட்ட காவல் போக்குவரத்து சார்பாக 6 நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. அதன்படி வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிந்து ஓட்ட வேண்டும். வாகன ஓட்டும்போது கைப்பேசி உபயோகக் கூடாது. மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். வாகனங்கள் இடைவெளி விட்டு செல்ல வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஓட்டுனருக்கு ஓய்வு தேவை உள்ளிட்டவையாகும்.

News October 9, 2024

ராணிப்பேட்டையில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு பரவலாக மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்று திறனாளிகள் நேரடியாக பிறருடன் பேசி தொடர்பு கொள்ள இயலாத நிலை மற்றும் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் உபகரணங்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக அக்.18ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் தரலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் விடுதிகள், கல்லூரியில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் அனைத்தும் பதிவு சான்று மற்றும் உரிமம் பெற வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட டி சான்று கட்டிட உறுதித் தன்மை சான்று அனைத்து ஆவணங்களுடன் 10 நாட்களுக்குள் tnswp இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (8.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
கண்ட்ரோல் ரூம் :9884098100

News October 8, 2024

ராணிப்பேட்டையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

image

ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக திமுக அரசை கண்டித்து அதிமுக நகர கழக செயலாளர் K.P.சந்தோசம் தலைமையில், மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் S.M.சுகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர். இதில் நகர கழக அவைத்தலைவர் குமரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News October 8, 2024

ராணிப்பேட்டை சுற்றுப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் சுற்றுப்பகுதிகளில் இன்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், நன்பகலுக்கு பின்னர், கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, கலவை, திமிரி, ஆற்காடு, புதுப்பாடி, திருப்பாற்கடல், பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், சுமைதாங்கி, வாலாஜா, வீசி மோட்டூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதுடன், ஒரு சில இடங்களில் தூறல் மழை பெய்தது.

News October 8, 2024

66 ஆயிரம் மாணவர்களுக்கு நோட்புக்…

image

தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 704 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 66384 மாணவ, மாணவிகளுக்கும், தேவையான பாடப்புத்தகங்கள் நோட்டுகள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கியதாக மாவட்ட கல்வி துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 8, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24*7 நாள் முழுவதும் இயக்கக்கூடிய 1077 மற்றும் 04172-271766 ஆகிய எண்களுடன் மாவட்ட கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.மேலும் புயல் மற்றும் மழை நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோ வடிவில் whatsapp மூலமாக 8300929401 என்ற எண்ணிற்கு உடனுக்குடன் அனுப்பிவிட வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!