India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி உத்தரவிட்டார். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இயக்க துணை இயக்குனர் சரஸ்வதி ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சரஸ்வதி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டால் ஆற்காடு வட்டாட்சியர்- 04172-235568, 97903 38055, வாலாஜா வட்டாட்சியர்- 04172-299808, 74188 26834, சோளிங்கர் வட்டாட்சியர்- 04172-290800, 79040 46386, நெமிலி வட்டாட்சியர்- 04177-247260, 90033 90636, கலவை வட்டாட்சியர்- 04173-290031, 80726 01378 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (10.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் :9884098100 எண்ணிற்கும் அழைக்கலாம்.

இராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று வடகிழக்கு பருவமழை-2024 தொடங்கப்படவுள்ளதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி ஜெயசுதா இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட வானிலை நிலவரங்கள் மற்றும் வெள்ள பாதிப்புகள், நான்கு நாட்களுக்கு முந்தைய வானிலை அறிவிப்புகள், வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு வானிலை சார்ந்த விவரங்கள் பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் டி.என். அலர்ட் என்ற செயலியை செல்போனில் பொதுமக்கள் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று அறிவித்துள்ளார்.

சோளிங்கர் அடுத்த ஐப்பேடு என்ற இடத்தில் இன்று மினி வேன் கவிழ்ந்ததில் 5 பெண்கள் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சோளிங்கர் போலீசார் விசாரணை நடத்தியதில், ஜோதிபுரத்தில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு மினி வேனில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடை விற்பனையாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதிவுள்ள விண்ணப்பதாரர்கள் WWW.drbrpt.in என்ற இணையதளம் மூலம் வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா, நேற்று ஆற்காடு வட்டம். புதுப்பாடி கிராமம், சரஸ்வதி மஹாலில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 248 பயனாளிகளுக்கு ரூ.66.40 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ந. சுரேஷ். வருவாய் கோட்டாட்சியர் திரு. இராஜராஜன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 14 வட்டாட்சியர்களை பணியிட மாறுதல் செய்து ஆட்சியர் சந்திரகலா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். சோளிங்கர் வட்டாட்சியர் ராஜலட்சுமி நெமிலி வட்டாட்சியர் ஆகவும், சோளிங்கர் தனி வட்டாட்சியர் செல்வி சோளிங்கர் பொறுப்பு வட்டாட்சியராகவும், நெமிலி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலையிலிருந்து வானம் அவ்வப்போது மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 2 மணி அளவில் மேகம் சூழ்ந்து ஒரு சில இடங்களில் தூறல் மழை பெய்தது. முத்துக்கடை வீசி, மோட்டார் வாலாஜா ஆட்டோ நகர் பனப்பாக்கம், சுமைதாங்கி, காவேரிப்பாக்கம் ஆகிய ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.