Ranipet

News June 21, 2024

நாளை குரூப் 1 மாதிரி போட்டித் தேர்வு

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-I போட்டித் தேர்விற்கான மாதிரித் தேர்வு நாளை (22.06.2024) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் போட்டித் தேர்வில் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 21, 2024

வாகனங்கள் முன் திருநங்கைகள் படுத்து போராட்டம்

image

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று திருநங்கைகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் வளர்மதி கலந்து கொள்ளவில்லை. மேலும் திருநங்கைகளுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடுரோட்டில் வாகனங்களின் முன்பாக படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News June 21, 2024

தேசிய மாணவர் படையின் யோகா தினம் நிகழ்ச்சி

image

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தேசிய மாணவர் படை யோகா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அருண்குமார், அலுவலர் கபில்தேவ் ஒருங்கிணைப்பாளர் ரு.மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் திரு. அசோக்குமார் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், த்ரிகோணாசனம், தனுர்ஆசனம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளை மாணவர்கள் பெற்றனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

News June 21, 2024

விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு

image

ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் அரசு பண்ணையில், நெட்டை குட்டை ரக தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் லதாமகேஷ் தெரிவித்துள்ளார்‌. இந்நிலையில் நெட்டை, குட்டை ஒட்டு தென்னங்கன்றுகள் ₹125க்கும், நெட்டை தென்னங்கன்றுகள் விலை ₹60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தென்னங்கன்றுகள் வாங்க விரும்புவோர் நேரில் வந்த பெற்று செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிவிக்கலாம் 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “கள்ளச்சாராயம்” காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் மதுபாட்டில்களை பதுக்குபவர் தொடர்பான தகவல்களை கீழ்காணும் எண்களான  96779-23100, 90427-42564, 90427-29352 என்ற எண்ணை அழைக்கலாம். மேலும், தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர். 

News June 20, 2024

கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிவிக்கலாம் 

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “கள்ளச்சாராயம்” காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் மதுபாட்டில்களை பதுக்குபவர் தொடர்பான தகவல்களை கீழ்காணும் எண்களான  96779-23100, 90427-42564, 90427-29352 என்ற எண்ணை அழைக்கலாம். மேலும், தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர். 

News June 20, 2024

பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

image

இராணிப்பேட்டை மாவட்டம் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்.
மத்திய அரசு பாராளுமன்றத்தில் அனைத்து சட்டத்தின் பெயர்களையும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்திருந்தது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.

News June 20, 2024

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (ஜுன் 21) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 20, 2024

நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

தமிழ்நாடு சீா்மரபினா் நலவாரிய நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி நேற்று(ஜூன் 19) தெரிவித்துள்ளாா் மேலும், ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தவா்கள் தங்கள் உறுப்பினா் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொண்டு பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத குடும்ப அட்டைதாரா்கள், அவா்களுக்கான மே மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டை ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளாா். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!