India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை நாவல் போரில் உள்ள அதிமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார் கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

தமிழகத்தில் நாளை (21-10-2024) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

ராணிப்பேட்டையில் நாளை கலை பண்பாடு துறை சார்பில் குரல் இசை பரதநாட்டியம் நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் விளாப்பாக்கம் ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் (அக் 20) நாளை காலை 9 மணி முதல் நடைபெறும் மேலும் விவரங்களுக்கு 04427269148/951152828 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரலேகா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (19.10.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் : 9884098100 எண்ணிற்கு அழைக்கலாம்.

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

ராணிப்பேட்டை மாவட்டம் கண்காணிப்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்தி வேலை வாங்குவது சட்டப்படி குற்றம். படிக்கும் வயதில் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். நாட்டின் அடுத்த தலைமுறைகள் இந்த குழந்தைகள் தான். அவர்களின் வாழ்வு சீரழிக்க யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.புகாருக்கு எண் :1098 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

பயிர் சேதத்தை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவ மழையின் போது பயிர்களை காக்க வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தாத விவசாயிகள் இ.சேவை மையம் மூலம் நவ.15ந் தேதிக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்காடு அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. முகாமில் 8-ம் வகுப்பு தோ்ச்சி முதல் 10-ஆம் வகுப்பு, கல்வித் தகுதிகளை உடைய வேலைநாடுநா்கள் கலந்து கொள்ளலாம்.

தக்காளி ரூ.50-60 கத்திரிக்காய் ரூ 35-40, கருணைக்கிழங்கு ரூ 60, வெண்டைக்காய் ரூ 25-30, சுரைக்காய் ரூ 20 வெண்பூசணி ரூ 20-25,உருளைக்கிழங்கு ரூ 40, கேரட் ரூ 50,பீன்ஸ் ரூ 70-90வெங்காயம் ரூ 50-60, சின்ன வெங்காயம் ரூ 50-55, இஞ்சி ரூ120-150, பூண்டு ரூ 300-350,காலிஃப்ளவர் ரூ 25 வாழைத்தண்டு ரூ 10-15 கீரை வகைகள் ரூ 10-15 மாங்காய் ரூ 50-60 முருங்கை ரூ 40-50,தேங்காய் ரூ 25-30,விற்பனை செய்யப்படுகிறது
Sorry, no posts matched your criteria.