India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோளிங்கர் அடுத்த கரிக்கன் தாங்கல் கிராமத்தில் கங்கை அம்மன் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மற்றும் சிலருக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. தேவராஜ் (30) கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருக்கு செண்பகம் என்ற மனைவியும், 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய விமானப்படையால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு ஜூலை 8ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பதிவுசெய்யலாம். அக்டோபர் 18ம் தேதி முதல் இத்தேர்வு நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04172- 291400 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேற்று தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு ஜூலை 8ம்தேதி முதல் 28ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். அக்டோபர் 18ம் தேதி முதல் இத்தேர்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி எண் 04172- 291400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஜூலை 13 அன்று நடைபெற உள்ள TNPSC GROUP 1 தேர்விற்கான முழுப்பாட மாதிரி தேர்வுகள் ஜூன் 24, 27 ஜூலை 2, 5 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04172291400 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ராணிப்பேட்டை என 2 சப்-டிவிஷன்கள் உள்ளன. இதில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள் என மொத்தம் 55 பேரை பணியிட மாற்றம் செய்து ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் பெரும்பாலானவர்கள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வேறு ஸ்டேஷனிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக திருடு போன 120 செல்போன்களை ராணிப்பேட்டை எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் போலீசார் மீட்டு அதை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி கிரண்ஸ்ருதி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜெகத்ரட்சகன், அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு 5வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி சமூக பாதுகாப்பு திட்ட கண்காணிப்பாளராகவும் , கலவை வட்ட வழங்கல் அலுவலர் சம்ஷத் பவானி வடிப்பகம் மற்றும் கெமிக்கல்ஸ் துணை வட்டாட்சியராகவும், துணை வட்டாட்சியர் பரமேஸ்வரி கலவை வட்ட வழங்க அலுவலர் ஆகவும் மொத்தம் 16 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில், நேற்று கள்ளச்சாராயத்தை ஒழிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், அரசு மதுபானங்கள் அங்கீகாரம் பெறாத தனி நபர்கள் விற்பனை செய்வதை தடுப்பது, போதை பொருட்களை தடுப்பு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோளிங்கரைச் சேர்ந்த சின்னையன் என்பவர் ஜமாபந்தி அலுவலரான ஆர்டிஓ மனோன்மணியிடம் கொடுத்த மனுவில், ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவைத்தலைவர் அசோகன், கொண்ட பாளையம் தக்கான்குளம் செல்லும் வழியில் நீர்வள கால்வாய் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருகிறார். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மனு கொடுத்தார்.
Sorry, no posts matched your criteria.