India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வினை மாவட்டம் முழுவதும் உள்ள 78 தேர்வு மையங்களில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பயிலும் 7688 மாணவா்கள் மற்றும் 7564 மாணவிகள் என மொத்தம் 15252 தேர்வர்கள் தேர்வெழுதினர்.
தமிழ்நாட்டில் மக்களவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரக்கோணம் தொகுதியில் வருமானவரித்துறை சாா்பில் கண்காணிப்புக்குழு செயல்பட்டு வருகிறது. இது தொடா்பாக சந்தேகத்துக்கிடமான வகையில் பணப் பரிவா்த்தனை மற்றும் பணப்புழக்கம் தொடா்பான புகார்களுக்கு 93638 67057 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளாா்.
அரக்கோணம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளா் விஜயன், தனது சொத்து விவரங்களை வேட்பு மனு தாக்கலின்போது சமர்ப்பித்தார். அதன்படி, அவரது வங்கிக் கணக்கில் ரூ.1.54 லட்சமும், அசையும் சொத்தாக ரூ.3.61 கோடியும், அசையா சொத்தாக ரூ.2.21 கோடியும் உள்ளது; மேலும் ரூ.4.82 கோடி கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்; அவரது மனைவி கவிதா பெயரில் அசையும் அசையா சொத்தாக ரூ.6.17 கோடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள இந்து வித்யாலயா CBSE பள்ளியின் ஆண்டு விழா நேற்று(மார்ச் 27) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சன் டிவி பட்டிமன்ற பேச்சாளர் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு நடப்பு கல்வியாண்டில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்று அரக்கோணம் வந்து கொண்டிருந்தது. அப்போது, பொதுப் பெட்டியில் சீட் பிடிக்கும் தகராறில் மும்பையை சேர்ந்த 3 பெண்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சேகர் மற்றும் ஒரு வாலிபரை பிளேடு மற்றும் நகங்களால் கிழித்துள்ளனர். இதில் ரத்த காயம் அடைந்த இருவர் அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தனர் மூன்று பெண்களிடம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று(மார்ச்.26) மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாலாஜா ரோடு ரயில் நிலையங்களில் போலீசார் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ கஞ்சா ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து பெங்களூருவைச் சேர்ந்த குமாரசாமி, மதன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி, பொது மற்றும் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த 12,038 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் வளர்மதி நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவை தேர்தலை முன்னிட்டு அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதன்படி அதிமுக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தமாக 8 பேர் நேற்று(மார்ச் 25) ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் வளர்மதி தகவல் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்களவை தேர்தல் குறித்த நேற்று(மார்ச் 25) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், அரக்கோணம் மக்களவை தேர்தலில் பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று அரக்கோணம் மக்களவை தேர்தலில் பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.