Ranipet

News July 8, 2024

தொழில் நிறுவனங்களின் குறைதீர்க்கும் கூட்டம்

image

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில்மையத்தின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீர்க்கும் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ் பி கிரண் ஸ்ருதி, தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன், சுற்றுச்சூழல் செயல் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

News July 8, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஜூலை 9 முதல் 12 மற்றும் 15ஆம் தேதிகளில் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 04172291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் பணிபுரியும் பாதிரியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் பெற்றுக்கொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

News July 7, 2024

தொழில் நிறுவனங்களுக்கான குறை தீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்களுக்கு நாளை (ஜுலை.8) மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

News July 7, 2024

ஆம்ஸ்ட்ராங் படுகொலை; அஇஜமக தலைவர் கண்டனம்

image

பி.எஸ்.பி. கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் ஐசக் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசிய கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. கொலையாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

News July 6, 2024

ஊடு பயிர் செய்ய ஊக்கத்தொகை; விண்ணப்பங்கள் வரவேற்பு

image

பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க தோப்புகள், பழத்தோட்டங்களில், பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்க 1ஏக்கருக்கு ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் விருப்பமுள்ள விவசாயிகள் உரிய சான்றிதழ்களுடன் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தகவல் தெரிவித்துள்ளார்

News July 6, 2024

19 ஆசிரியர் பணியிடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப் பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 19 காலி பணியிடங்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை மாவட்ட ஆதிராவிடர் நல அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News July 6, 2024

ராணிப்பேட்டையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

ராணிப்பேட்டையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்தது. கடந்த சில நாள்களாக பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News July 5, 2024

தென்மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள்

image

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 30 கொண்ட 9 குழுக்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்து உள்ளனர். இந்த குழுவில் 6 பெண் வீராங்கனைகள் கேரளாவில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழா, இடுக்கி மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டத்திற்கு மீட்பு பணிக்காக செல்ல அரக்கோணத்தில் பேரிடர் மீட்புப் படைவீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

error: Content is protected !!