Ranipet

News March 24, 2024

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

அரக்கோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இந்த தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறு தேர்தலில் இருக்கக் கூடாது. எல்லா தகவல்களையும் தெளிவாக தேர்தல் பயிற்சி வகுப்பில் கற்றுக் கொள்ள வேண்டும். மறு தேர்தல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிகஅவசியம் என்றார்.

News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, அரக்கோணத்தில் பேராசிரியர் அப்சியா நஸ்ரின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 23, 2024

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி வேட்பாளரான வழக்கறிஞர் பாலு பொதுமக்களிடையே இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் வேட்பாளர் பாலுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News March 23, 2024

ராணிப்பேட்டை: தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் மாவட்ட காவல் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார், குணசேகரன். துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு, வெங்கடேசன் அரக்கோணம் உட்கோட்டம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்

News March 22, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (45 ). இவர் இன்று காலை மினி லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். லாடவரம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் வரும்போது சாலை ஓரம் இருந்த பனைமரத்தில் நிலை தடுமாறி மினி லாரி மோதியதில் சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

News March 22, 2024

ராணிப்பேட்டை: மக்கள் கவனமாக இருக்க எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என நேற்று(மார்ச் 21) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.

News March 22, 2024

அரக்கோணம் பாமக வேட்பாளர் அறிவிப்பு

image

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக வழக்கறிஞர் கே.பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு, புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 22, 2024

ராணிப்பேட்டை: மீறினால் கடும் நடவடிக்கை!

image

அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகே வாக்கு சேகரிக்க சமூக வலைத்தளம், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

News March 21, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு என்னும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகளை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 21, 2024

ராணிப்பேட்டை: திரளான கூட்டம்

image

ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பார்வதி சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

error: Content is protected !!