Ranipet

News November 3, 2024

தண்டவாளத்தில் தலை வைத்து ஒருவர் தற்கொலை

image

அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அருந்ததி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (25). இவருக்கு திருமணமாகி கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக இன்று மாலை தணிகை போளூர் ரயில்வே கேட் அருகில் சரக்கு ரயில் செல்லும் போது தண்டவாளத்தில் தலை வைத்து வினோத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 3, 2024

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவது விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 2வது பெரிய காரணம் தவறாக வாகனம் ஓட்டுவது. விதிகளை மீறியதால்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும் என ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி தெரிவித்துள்ளார். 

News November 3, 2024

ராணிப்பேட்டை மாவட்ட மாணவ மாணவியர்களுக்கு பேச்சு போட்டி

image

அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. நவம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கியும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் பகல் 11 மணிக்கு தொடங்கியும் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டி வாலாஜா பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகக்கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளன.

News November 3, 2024

திருக்குறள் முற்றோதலில் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் திருக்குறள் முற்றோதுதல் போட்டியில் பங்கேற்கலாம் எனவும் விருப்பம் உள்ளவர்கள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 0416-2256166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முழுமையாக நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வேலூர்-632009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

News November 3, 2024

உரிய அனுமதி பெற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் அரசின் உரிய அனுமதி பெற்று இயங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார் உரிய அனுமதி இன்றி செயல்படும் இல்லங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News November 2, 2024

ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (02.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News November 2, 2024

பண மோசடி குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் “அங்கீகரிக்கப்படாத டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்து பண மோசடிக்கு உள்ளாகாதீர்கள். அங்கீகரிக்கப்படாத போலியான டிரேடிங் செயலியின் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு, இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை தொடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

News November 2, 2024

பண மோசடி குறித்து மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் “அங்கீகரிக்கப்படாத டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்து பண மோசடிக்கு உள்ளாகாதீர்கள் அங்கீகரிக்கப்படாத போலியான டிரேடிங் செயலியின் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு, இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை தொடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

News November 2, 2024

தமிழறிஞர்களிடம் விண்ணப்பிக்க வரவேற்பு

image

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

News November 2, 2024

ராணிப்பேட்டை மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

image

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நவ 7ஆம் தேதி மற்றும் நேரு பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி 8ஆம் தேதி வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 6ம்வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு விதிமுறைகளின் படி பங்கேற்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!