India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை 7 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி பூண்டிஊராட்சி தொடக்கப்பள்ளி, காவனூர் குப்பம்மாள் தாண்டவராயன் திருமண மண்டபம், ஆற்காடு தாழனூர் எஸ்.டி.எஸ் மஹால், கரடிகுப்பம் சமுதாயக்கூடம், தணிகைபோளுர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, காட்டுப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஓச்சேரி எஸ்.எஸ்.ஆர் மஹால் ஆகிய 7 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் எஸ்.பி கிரண் ஸ்ருதி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 8 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி தெரிவித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குணசேகரன், குமார், துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன் உடன் இருந்தனர்.
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணிபேட்டையில் உள்ள மேல்நிலை நீா் தேக்க தொட்டி மேற்புறத்திற்கு செல்லும் வழிகளை வரும் திங்களுக்குள் தடுப்புகள் கொண்டு மூடப்பட வேண்டும். அதை தொடர்ந்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் சுத்தம் செய்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் சம்மந்தப்பட்ட அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் தென்னிந்திய புத்த விஹார் நிறுவனருமான K.ஆம்ஸ்ட்ராங் அரசியல் படுகொலை செய்யப்பட்டார். அதை கண்டித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்தக்கோரியும் இன்று மாலை 3.00 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆற்காடு, இராணிப்பேட்டை இடையிலான பாலாற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் பராமரிப்பு சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இச்சீரமைப்பு பணி காரணமாக 19.07.2024 முதல் 19.08.2024 வரை வாகனங்கள் செல்ல தடைவிதித்து மாற்றுப் பாதையில் செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (16-07-2024) இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, ராணிபேட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த வளர்மதி சமூக நலத்துறை இணை செயலாளராக மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக தமிழக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை இயக்குநராக பணியாற்றி வந்த J.U சந்திரகலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அரக்கோணத்தில் காலிப்பணியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு,18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ என்ற தளத்தில் ம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.