India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரடியாகவும், கைப்பேசி வாயிலாகவும் புகாா் தெரிவிக்கலாம். பொது பார்வையாளர்கள் சுனில்குமாா் – 93639 73902, சத்யத்ஜித் நாயக் – 74183 42803, செலவின பாா்வையாளா்கள் சிவசங்கா்யாதவ் – 93639 81375, மேவாராம் ஓலா – 93639 84150 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளான குப்பிடிசாத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சொறையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வாழைப்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய மையங்களில் மாவட்ட எஸ்பி கிரண் சுருதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்றிருந்தது. இந்நிலையில் இன்று(மார்ச் 18) சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்த இன்னொரு லாரி, நின்று இருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அரக்கோணம் மக்களவை தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேற்று அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உடன் இருந்தார்.
அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிலில் சுசிலா(64) என்பவர் தனது மகனுடன் உட்கார்ந்திருந்தார். ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் சுசீலாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை வாலிபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசில் நேற்று(மார்ச் 27) இரவு சுசிலா புகார் கொடுத்தன் பேரில், ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை அருகே தனியாருக்கு சொந்தமாக மரக்கட்டைகள் சேமித்து வைக்கும் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் 2:30 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வினை மாவட்டம் முழுவதும் உள்ள 78 தேர்வு மையங்களில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் பயிலும் 7688 மாணவா்கள் மற்றும் 7564 மாணவிகள் என மொத்தம் 15252 தேர்வர்கள் தேர்வெழுதினர்.
தமிழ்நாட்டில் மக்களவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரக்கோணம் தொகுதியில் வருமானவரித்துறை சாா்பில் கண்காணிப்புக்குழு செயல்பட்டு வருகிறது. இது தொடா்பாக சந்தேகத்துக்கிடமான வகையில் பணப் பரிவா்த்தனை மற்றும் பணப்புழக்கம் தொடா்பான புகார்களுக்கு 93638 67057 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளாா்.
அரக்கோணம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளா் விஜயன், தனது சொத்து விவரங்களை வேட்பு மனு தாக்கலின்போது சமர்ப்பித்தார். அதன்படி, அவரது வங்கிக் கணக்கில் ரூ.1.54 லட்சமும், அசையும் சொத்தாக ரூ.3.61 கோடியும், அசையா சொத்தாக ரூ.2.21 கோடியும் உள்ளது; மேலும் ரூ.4.82 கோடி கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்; அவரது மனைவி கவிதா பெயரில் அசையும் அசையா சொத்தாக ரூ.6.17 கோடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள இந்து வித்யாலயா CBSE பள்ளியின் ஆண்டு விழா நேற்று(மார்ச் 27) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சன் டிவி பட்டிமன்ற பேச்சாளர் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு நடப்பு கல்வியாண்டில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.