India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை புதிய பாலார் பாலம் பராமரிப்பு பணி காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து மாற்றத்திற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மூலமாக தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மேம்பாலம் பணிகள் நடைபெறுவதாகவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5-வது மாவட்ட ஆட்சியராக சந்திரகலா இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அரசின் திட்டங்களை எளிமையான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவறையில் வருவாய்த் துறை தொடர்பான தரவுகளை கணினியில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், அலுவலக மேலாளர் பாபு உடன் இருந்தனர்/
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுள்ள சந்திரகலா வருவாய்த்துறை தரவுகளை பதிவேற்றம் செய்யும் பணி உட்பட பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு செய்ய வந்த மாற்றுத்திறனாளியிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் 21ம் தேதியன்று நடத்தப்படும் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி, ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக தமிழக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை இயக்குநராக பணியாற்றி வந்த J.U சந்திரகலா நியமிக்கப்பட்டார். இதையடுத்து J.U சந்திரகலா ராணிப்பேட்டை ஆட்சியராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான வாழை, மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2024-25 ஆண்டிற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காப்பீடு செய்ய கடைசி தேதி 16.9.2024 எனவும் மேலும் விவரங்களுக்கு உள்ள வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியராக சந்திராகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் துணை ஆட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக வளர்மதி பணியாற்றி வந்தார். இவர் சமூகநல இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு ஆட்சியை வளர்மதிக்கு புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் வரும் 27 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 32 31 ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் இணைந்து முகாமை நடத்துகிறது. எட்டாம் வகுப்பு முதல் இளநிலை பட்டம் மற்றும் டிப்ளமோ என அனைத்து கல்வி தகுதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படும். வயதுவரம்பு 18 முதல் 25 வயது ஆகும்.
Sorry, no posts matched your criteria.