Ranipet

News October 19, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்-19 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

ராணிப்பேட்டை: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

News October 19, 2025

ராணிப்பேட்டை: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.

1. இந்தியன் ஆயில்: 18002333555

2. பாரத் பெட்ரோல்: 1800224344

3. HP பெட்ரோல்: 9594723895

பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News October 19, 2025

ராணிப்பேட்டை: 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

image

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம்

News October 19, 2025

ராணிப்பேட்டை: நிலம் வாங்க போறிங்களா…?

image

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா அல்லது புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்.
2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும்.
3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம்.
4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, இந்த <>லிங்கில் சென்று<<>>, ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் தேவையான விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம். ஷேர்

News October 19, 2025

ராணிப்பேட்டை மக்களே நாளை இதை மறவாதீர்!

image

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 19, 2025

ராணிப்பேட்டை: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி.பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க

News October 19, 2025

ராணிப்பேட்டை: மழை குறித்து கண்காணிக்க புதிய கட்டுப்பாட்டு அறை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது, இந்நிலையில் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று அக்டோபர் 18ம் தேதி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இரவு நேர பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் எங்காவது மழை பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

News October 19, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (அக்-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 18, 2025

ராணிப்பேட்டை மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

image

ராணிப்பேட்டை மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!