Ranipet

News March 16, 2025

ராணிப்பேட்டையில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

image

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (37).இவருக்கும் அஷ்வினி என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.இதையடுத்து அஷ்வினி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.அஷ்வினி பரிசோதனைக்காக மருத்துமனைக்கு சென்ற நிலையில் அருண் நேற்று (மார்ச்.15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News March 16, 2025

ராணிப்பேட்டை மாவட்ட ரோந்து பணி காவலர்களின் விவரம் 

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 15, 2025

குழந்தை தொழிலாளர் தடுப்பு எண் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை குழந்தைகளை தொழிலாளராக மாற்றி வேலை வாங்குவதை தடுக்க உதவி எண் 1098-யை வழங்கி உள்ளது. இதன்மூலம் புகார்கள், தகவல்கள் பொதுமக்கள் கொடுக்கலாம். குழந்தைகளிடம் கனிவாக இருங்கள், வேலை வாங்காதீர்கள் என மாவட்ட காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. காவல்துறையின் சீரிய முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

News March 15, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களில் தோல் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை பெறாத விவசாயிகளின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். நில உரிமை தகராறு நீதிமன்ற வழக்கங்களால் இழப்பீடு பெறாத விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

News March 15, 2025

வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி கிராமம் குயவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் ரமேஷை கடித்தது. உறவினர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். இந்நிலையில் ரமேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச்.14) உயிரிழந்தார். இது குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு விதிகளின்படி நல்லடக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

News March 15, 2025

ஆற்றங்கரை ஓரம் எலும்புக்கூடு டி.என்.ஏ டெஸ்ட்

image

உரியூர் கிராமத்தின் ஆற்றங்கரை ஓரத்தில் நேற்று (மார்ச்.14) எலும்புக்கூடு இருப்பதாக அப்பகுதி மக்கள் தக்கோலம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், டிசம்பர் 13ம் தேதி சாந்தி என்பவர் வீட்டில் இருந்து காணாமல் போனார்.அவரது எலும்பு கூடாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதனால் போலீசார் எலும்புக்கூடை மீட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு இன்று அனுப்பி வைத்துள்ளனர்.

News March 14, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 14, 2025

சிறுவர் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

image

காரை கூட்டுரோட்டில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசுயா, கண்காணிப்பாளர்கள் கண்ணன் ராதா விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News March 14, 2025

அரக்கோணம்: அகமதாபாத் செல்லும் ரயில் நேரம் மாற்றம்

image

சென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத் செல்லும் ரயில் எண் 20953 அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு மாலை 4.48 வருகை தந்து 4.50க்கு புறப்படும். வரும் ஏப்ரல் 20 தேதி முதல் இந்த வாராந்திர ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கும் ரயில் நேரம் மாற்று அமைக்கப்பட்டு சென்னையில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 11.38 வருகை தந்து 11.40 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News March 14, 2025

வாலாஜாவில் வீட்டு மனை பட்டா வழங்க ஆய்வு

image

வாலாஜா நகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று நேரில் கள ஆய்வு செய்தார். அப்போது எத்தனை ஆண்டுகளாக எத்தனை பேர் குடியிருந்து வருகின்றனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை உடனிருந்தனர்.

error: Content is protected !!