India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதையடுத்து பாமகவிற்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் பெரும் வகையில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேர்தல் தொடர்பாக பதிவான புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் நடராஜ் நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் பல்வேறு இயற்கை பணிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமையை மேம்படுத்தும் விதமாக நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் ஆயிரம் பூவரசு மர விதைகளை ஆற்காடு நகராட்சிக்கு வழங்கினார்.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று(மார்ச் 18) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்து பேசினார். அப்போது, வேட்புமனு நாளில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வர வேண்டும். 3 வாகனங்கள் மட்டுமே இருக்க வேண்டும். காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். சனிக்கிழமை அன்றும் மனு தாக்கல் செய்யலாம் என்றார்.
முத்துக்கடை பகுதியை சேர்ந்த பெர்லின் என்பவர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய மூத்த மகளிடம் பாதிரியார் ரகுராஜ்குமார் (54) என்பவர் பாலியல் அத்துமீறலில் கொடுத்துள்ளார். ஆதலால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷாதின் நேற்று(மார்ச் 17) பாதிரியார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 1122 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 205 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான மையங்கள் ஆகவும், 13 வாக்கு சாவடி நிலையங்கள் மிகவும் பதட்டமான மையங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் 5346 அலுவலர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்களுக்கான வாகனங்களை இன்று ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி தொடங்கி வைத்தார். இந்தக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளது.
சோளிங்கர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் ஆர்கே பேட்டை அடுத்த ராஜா நகரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு இரண்டு கிலோ மான் மாமிசம் விற்பனை செய்தார். தகவலின் பேரில் ஆற்காடு வனத்துறையினர் அர்ஜுனன், மதன்குமார் ஆகியோரை இன்று கைது செய்தனர். முன்னதாக சோளிங்கர் வட்டாட்சியர் தேவி முன்பாக இரண்டு பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.
நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேதி இன்று(மாரச் 16) அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து வாலாஜாபேட்டை நகராட்சி சேர்மன் ஹரிணி தில்லையின் அறையை நகராட்சி பொறியாளர் சண்முகம் தலைமையில் ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்படும் வரை இந்த அறை பூட்டி வைக்கப்படும் என பொறியாளர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.