India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.86 லட்சம் மதிப்பில் 31,929 விவசாய குடும்பங்களுக்கு பண்ணை கருவிகள், விசைத்தெளிப்பான், தார்பாலின், உயிரி உரங்கள் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் மற்றும் தொகுப்புகள் ஆகியவை பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, திமிரி, காவேரிப்பாக்கம் என ஏழு வட்டாரத்தில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 15 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் ஒரே இடத்தில் பங்கேற்று மக்களிடம் மனுக்களை பெறுகின்றனர். இந்த முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் தமிழ் முதல்வன் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ் முதல்வன் திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று செயலர் தெரிவித்தார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை சூரல்மலை என்ற இடத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு இதுவரை 80-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியானது. நிலச்சரிவு மீட்பு பணிக்காக அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் 60 பேர் கூடுதலாக இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே மீட்பு பணியில் வீரர்கள் உள்ளனர். இதுவரை மொத்தம் 300 வீரர்கள் அங்கு உள்ளனர்.
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன்னேற்பாடுகளுக்கு தேவையான நிதியில் ரூபாய் 3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு முறையான குடிநீர் வழங்கும் பணிகள் குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், நேர்முக உதவியாளர் நிலம் கலைவாணி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் புதிய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. மேலும் ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் இந்தியாவின் முதன் ஜாகுவார், லேண்ட் ரோவர் அலையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமையவுள்ளது.
Sorry, no posts matched your criteria.