India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை காவல் துறை இன்று (மார்.17) வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் ஹேக்கர்களிடமிருந்து ஸ்மார்ட்போனை பாதுகாப்பதற்கான சிறந்த உதவிக்குறிப்புகள் வலுவான கடவுச்சொற்கள் அல்லது பயோமெட்ரிக்ஸை மென்பொருளை தொடர்ந்து புதுப்பிக்கவும் பொது வைஃபையுடன் கவனமாக இருங்கள் நம்பகமான பயன்பாடுகளை மட்டும் நிறுவவும் சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மற்றும் இணைப்புகளைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து <
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவர் நெமிலி ஆனந்தன் போலீசாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நெமிலி சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் ஆனந்தன் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கூடலூர் கிராமப் பகுதியில் கொண்டபாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனர் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 41 கிலோ இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அந்த வாகனத்தில் சென்ற அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த சுகுமார் என்பவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச்.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றிய விவாதித்தல் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து விவாதித்தல் ஆகியவற்றுக்கான கிராம சபை கூட்டம் மார்ச் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், “போதைப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பிரகாசமான எதிர்காலத்திற்கு வித்திடுங்கள். தீய பழக்கத்தை இன்றே கைவிடுங்கள். போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை 89039 90359 whatsapp எண் மூலமாக தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்கள் பிஎஸ்சி ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் 3 வருட முழுநேர பட்டப்படிப்பு படிப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்
இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னையைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பெரிய மலையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. இதற்கு சுமார் 1400 படிகள் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். படி ஏற இயலாத பக்தர்கள், முதியோர்கள் ஆகியோர்களின் வசதிக்காக ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதை மாதாந்திர பராமரிப்புக்காக வரும் மார்ச் 24 மற்றும் மார்ச் 25 ஆகிய தேதிகளில் இச்சேவை நிறுத்தப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.