Ranipet

News July 10, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 பேர் எழுதுகின்றனர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வில் 21,000 பேர் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பயன்பாட்டில் திறக்கவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 12.07.2025 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News July 9, 2025

ராணிப்பேட்டையில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்டறியும் கூட்டம் (ஜூலை 10) நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இ-பிளாக்கில் முதல் தள கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார். இதில் அனைத்து தொழில் நிர்வாகிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 9, 2025

ராணிப்பேட்டையில் உள்ளூரிலேயே அரசு வேலை அறிவிப்பு

image

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இதில், ராணிப்பேட்டையில் மட்டும் 43 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். <>மேலும் தகவலுக்கு<<>> (04162220042)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17001770>>தொடர்ச்சி<<>>

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். *அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்

News July 9, 2025

ராணிப்பேட்டை தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டையில் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை7 தேர்வு மையத்தை உள்ளடக்கிய 85 தேர்வு கூடங்களில் 21,701 பேர் எழுதுகின்றனர். இதற்காக கூடுதல் பஸ், தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. தேர்வர்கள் காலை 8-9 மணிக்குள் வருகை புரிய வேண்டும். தாமதமானால் அனுமதியில்லை. இதற்கான நுழைவு சீட்டை <>இங்கு கிளிக் செய்து <<>>டவுன்லோடு பண்ணிக்கலாம். *தேர்வு எழுதும் நண்பர்களுக்கு கட்டாயம் பகிரவும்*

News July 8, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜூலை 08)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News July 8, 2025

குரூப்-IV தேர்வை முன்னிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனை

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள குரூப்-IV தேர்வை (ஜூலை 12, 2025) முன்னிட்டு, தேர்வுப் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா ஆலோசனைகள் வழங்கினார். தேர்வர்கள் காலை 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள். அரைமணி நேரத்திற்கு முன் வர வேண்டும். அடையாள அட்டை, ஹால் டிக்கெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

News July 8, 2025

JUST NOW: அரக்கோணத்தில் ரயில் சேவை பாதிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் – சென்னை ரயில் தடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததில், 90 நிமிடங்களுக்கு மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகளை சரி செய்யும் முயற்சியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணம் ரயில் நிலையத்தில் சதாப்தி , இண்டர்சிட்டி ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

News July 8, 2025

ஹவுஸ் ஓனருடன் பிரச்சனையா?

image

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445777416 (வாடகை அதிகாரி) புகார் செய்யலாம் அல்லது <>உங்க பகுதி<<>> வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க. <<16989985>>தொடர்ச்சி<<>>

News July 8, 2025

வாடகை வீட்டில் இருப்போருக்கான உரிமைகள்

image

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்

error: Content is protected !!