India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நெமிலி தாலுகா மேலேரி கிராமத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வி.ஏ.ஓ விநாயகமூர்த்தி ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் கலந்து கொண்டனர் . மாவட்ட சமூக பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவருக்கும் கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
பெல் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ஆசிஸ் ஜெயின் என்பவர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக கொடுத்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீஸ் எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் வழிகாட்டுதலின்படி உதவி ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் ஆன்லைனில் இழந்த ரூ. 1 லட்சத்து 17ஆயிரத்து 905 பணத்தை மீட்டனர். இதையடுத்து ஆசிஸ் ஜெயின் என்பவரிடம் இன்று பணத்தை ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், நேர்முக உதவியாளர் நிலம் கலைவாணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், திமிரி, ஆற்காடு, வாலாஜா ஆகிய 10 மையங்களில் நேற்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வினை 688 மாணவர்கள், 1355 மாணவிகள் என மொத்தம் 2043 மாணவ மாணவிகள் எழுதினர். 100 மாணவர்கள், 103 மாணவிகள் என மொத்தம் 203 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் அமைந்துள்ள ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால் இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக அதிகரிக்கும் என புராணம் கூறுகிறது. இக்கோவிலில் வழிபட்டால் பெண்களின் கர்ப்ப கால பிரச்ச்னைகள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.
தமிழத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா எனபதை கமென்டில் குறிப்பிடவும்
தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று மழை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 8:30 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் வட்டங்களில் இருந்து கரும்பை விவசாயிகள் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனா் நிகழாண்டு ஆலைக்கு அனுப்பும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசு சாா்பில் ரூ.3150ம், தமிழக அரசின் கரும்பு ஊக்கத் தொகை ரூ215 சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.3365 கிடைக்கும் என திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியர் ஜெ.மலா்விழி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றைக்கு மழை வர வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யுங்கள்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.