India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்ப அலை வீச கூடும் என அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை வீட்டை விட்டு அவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் வெயிலில் வெளியே வந்து உடல் நலத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அரக்கோணம் அடுத்த வேடல் காந்திநகரை சேர்ந்தவர் நரசிம்மன்(46). விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு நபருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.22) இரவு நரசிம்மனை ஒரு கும்பல் கத்தியால் வெட்டியது. உயிர் தப்பிக்க நரசிம்மன் அங்கும் இங்கும் ஓடினார். அப்போதும் அவரை விடாமல் அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த நரசிம்மன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன்(45). ஆட்டோ ஓட்டுநரான இவரது உறவினர்கள் பாஸ்கரன், கவாஸ்கர், ராஜ்குமார். இந்த இரு குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.22) இரவு பரந்தாமனை பாஸ்கரன் தரப்பினர் கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த பரந்தாமன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்வது குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஏப்.22) நடைபெற்றது. ஆட்சியர் வளர்மதி, டிஆர்ஓ சுரேஷ், திட்ட இயக்குநர் லோகநாயகி, குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வன்னியர் தெருவை சேர்ந்தவர் தாட்சாயணி(43). இவர் நேற்று(ஏப்.21) காலை வீட்டின் முன்னால் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதில் வாயில் நுரைத்தள்ளி கீழே விழுந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையிலும் தாட்சாயணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மீனா(45). இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். நேற்று உறவினர்களுடன் பைக்கில் செல்லும்போது அங்குள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதில் மீனா தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஏப்.21) உயிரிழந்துள்ளார்.
சோளிங்கரில் அமைந்துள்ள அருள்மிகு யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு மகா தேரோட்டம் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாலாஜா தாலுகா அம்மூர் அடுத்த ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகலா (28). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ராணிப்பேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக சசிகலா இறந்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த சித்தேரியில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி அங்குள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார்.அங்கு பாமகவினர் கட்சி துண்டு அணிந்திருந்தனர் .இது தொடர்பாக திமுக பாமக இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வினோத் காந்தியின் கார் கண்ணாடி இன்று உடைக்கப்பட்டது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிடில் சாலை மறியல் செய்வோம் என்று திமுக நகர அவை தலைவர் துரை சீனி வாசன் தாலுகா போலீசாரிடம் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான வளர்மதி ராணிப்பேட்டை காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு செய்துள்ள ஏற்பாடுகளை அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும்; 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.