India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ 30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் மேலுள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் மொத்தம் உள்ள 369 ஏரிகளில் 19 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், 12 ஏரிகள் 75 % முதல் 99 % வரை நிரம்பியுள்ளதாகவும்,19 ஏரிகள் 75 % முதல் 50 % வரை நிரம்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில், இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 7285 நபர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாட்டாரை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை ராணிப்பேட்டை மாவட்ட அமைச்சர் காந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் இருந்தனர். மீட்பு பணிகள் விரைந்து ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (நவ.30) விழிப்புணர்வு செய்தியில், “நீங்கள் பதிவிறக்கும் முன் சிந்தியுங்கள்! மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் போலி யோனோ SBI APK கோப்பை அனுப்புகிறார்கள். கோப்பைப் பதிவிறக்கம் செய்து/நிறுவியதும், மோசடி செய்பவர்கள் உங்கள் போனை அணுகி உங்கள் கணக்கிலிருந்து PhonePe / பிற UPI பேமெண்ட் ஆப்ஸ் மூலம் பணத்தைப் பறிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக ராணிப்பேட்டையில் இன்று காலை முதலே மழை பெய்துவருகிறது . மழையினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புயல் (ம) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள். புகார்களை உடனுக்குடன் தெரிவிப்பதற்காக, மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கூறியிருப்பதாவது ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பாக, மாவட்ட முழுவதும் 47 தற்காலிக மழை நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மழை மீட்பு கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வரும் டிச. 5 ம் தேதி வரை முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் www.mudhalvarmarundhagam.tv.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக்கடக்க உள்ளது. ராணிப்பேட்டையின் பல்வேறு பகுதியில் இன்று மழை பெய்துவரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இரவு 7 மணிவரை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாக ஜோலார்பேட்டைக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் மாலை 5.55 மணிக்கு இயக்கப்படுகிறது. பெஞ்சல் புயல் காரணமாக ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் அந்த ரயிலில் பயணிக்க இருந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.