Ranipet

News May 8, 2024

கல்லூரி கனவு’ குறித்த ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று(மே 7) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிளஸ்-2 முடித்த மாணவ மாணவியர், உயர்கல்வியை எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம் என்பது குறித்து விளக்கும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

News May 8, 2024

பேரூராட்சி தலைவர் தரையில் அமர்ந்து தர்ணா

image

கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட யாதவர் தெருவில் உள்ள சின்டெக்ஸ் டேங்கில் மின் கசிவு ஏற்படுகிறது . இதை சரி செய்ய வேண்டும் என பேரூராட்சி தலைவர் கலா சதீஷ் மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தார். மின்வாரியத்திடம் மூன்று தடவை தகவல் சொல்லியும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மின்வாரிய அலுவலகம் முன்பாக கலாசதீஷ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர்

News May 8, 2024

ராணிப்பேட்டை: 10 வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின், மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிநாட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 30 – 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி ராணிப்பேட்டை உட்பட 12 மாவட்டங்களில் இன்று(மே 8) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 8, 2024

நெமிலி: தேர் வெள்ளோட்டம் முன்னேற்பாடு ஆய்வு

image

நெமிலி தாலுகா பொய்கை நல்லூர் கிராமத்தில் இன்று(மே 8) தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொய்கை நல்லூர் கிராமத்தில் தேர் வெள்ளோட்ட முன்னேற்பாடு குறித்து நெமிலி வட்டாட்சியர் பாலச்சந்தர் நேற்று(மே 7) ஆய்வு நடத்தினார். அப்போது தேரோட்டம் நடைபெறும் தெருகளில் மேடு பள்ளங்கள் ஏதேனும் உள்ளதா, மின் வயர்களின் நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். உடன் போலீசார் இருந்தனர்.

News May 7, 2024

 கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

image

ஆற்காடு தாலுகா விளாப்பாக்கம் அடுத்த எலந்தன்குட்டை அருகில் உள்ள விவசாய கிணற்றில் மனநலம் பாதிக்கப்பட்டவரான சரவணன் (52)  கடந்த 3 நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையிவ் வந்த தீயணைப்பு துறையினர் அவரை இன்று மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News May 7, 2024

வெளிநாட்டு வேலை ஏமாற வேண்டாம் – ஆட்சியர்

image

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை சமூக வலைதளம் மூலமாக மூளைச்சலவை செய்து கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் நாட்டில் உள்ள ஐ டி நிறுவனங்களில் வேலைக்கு அழைத்து செல்வதாக ஏமாற்றுகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து 18003093793 என்ற எண்ணில் விசாரித்துவிட்டு செல்ல ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி எச்சரித்துள்ளார்.

News May 7, 2024

ராணிபேட்டை: 32 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் +2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மாணவர்கள் 5,742 பேரும், மாணவிகள் 6,659 பேரும் என மொத்தம் 12,401 மாணவர்கள் +2 பொதுத் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5,114 பேரும், மாணவிகள் 6,330 பேரும் என மொத்தம் 11,444 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகள் மற்றும் 27 தனியார் பள்ளிகள் என மொத்தம் 32 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

News May 7, 2024

ராணிப்பேட்டை: இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று சேலம் உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

ஆற்காடு: மதிமுக 31 ஆவது ஆண்டு தொடக்க விழா

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர மதிமுக சாா்பில் கட்சியின் 31 ஆவது ஆண்டு தொடக்க விழா அண்ணாசிலை அருகில் நேற்று(மேம 6) நடைபெற்றது. விழாவுக்கு நகர செயலாளா் பிரகாசம் தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் அமுல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயராமன் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் உதயகுமாா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

News May 6, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 92.28% தேர்ச்சி

image

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 92.28% தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 85.30% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.76% தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி முதல் அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!