India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 85.48% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 79.75% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.27% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
ராணிப்பேட்டை, ரத்தினகிரியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து உதவி பொறியாளர் வீட்டில் 2 மாதத்திற்கு முன்பு 75 சவரன் நகைகள் திருடு போனது. இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த கண்ணதாசன், ஐயப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் குண்டர்சட்டத்தில் கைது செய்ய எஸ் பி கிரண் ஸ்ருதி பரிந்துரையில் ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கஞ்சா குற்றவாளிகளை கைது செய்தல், கோர்ட் வழக்குகளில் இருந்து தலைமறைவாக இருப்பவர்களை கைது செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட வாலாஜா இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜாவை பாராட்டி எஸ்பி கிரண்ஸ்ருதி இன்று சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
வாலாஜா தாலுகா தென்கடப்பந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவராக பிச்சைமணி என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்நிலையில் இன்று காலை வீட்டில் மின் மோட்டார் ஸ்விட்சை ஆப் செய்ய வீட்டில் நடந்து செல்லும் போது தரையில் வழுக்கி விழுந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலை வாலாஜா போலீசார் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் +2 முடித்த மாணவ, மாணவிகள் உயா் கல்வி என்ன படிக்கலாம் என்பது குறித்த கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி மே 13 ஆம் தேதி பூட்டுத்தாக்கு அன்னை மீரா பொறியியல் கல்லூரி மற்றும் அரக்கோணம் VGN மெட்ரிகுலேஷன் உயா்நிலைப் பள்ளி ஆகிய 2 மையங்களில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் நடைபெறும் இந்நிகழ்வில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.
அரக்கோணம் ரயில் நிலையம் 2வது பிளாட்பார தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 60வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று(மே 8) விரைவு ரயில் மோதி உயிரிழந்தார். இவரது உடலை ரயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து வாலாஜா, கூராம்பாடி கிராமத்தில் மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்காக உள்ள 23 ஹெக்டேர் நிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து நேற்று(மே 8), வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் வருவாய்த் துறையினர் முதற் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ராணிப்பேட்டையில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், வாலாஜா, கூராம்பாடி கிராமத்தில் மேய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு இடம் 23 எக்டர் நிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை இன்று வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் வருவாய்த் துறையினர் முதல் கட்டமாக தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்த்து நலம் விசாரிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக காரில் இன்று வருகை தந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி வழியாக வந்த அவரை பார்த்து திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கையசைத்தனர். பதிலுக்கு மு.க ஸ்டாலினும் கையை அசைத்தபடி சென்றார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் வாலாஜாபேட்டையில் அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வீடியோ கேமராக்கள் முறையாக இயங்குவதையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் (Strong Room) பாதுகாப்பையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ச.வளர்மதி இன்று (மே.08) பார்வையிட்டு பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
Sorry, no posts matched your criteria.