India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஃபெஞ்சல் புயல் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.இந்தநிலையில், இன்று (டிச 03) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, அவர்கள் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் நீர் நிரம்பியுள்ள குளம், ஏரி, ஆறு, ஆகிய பகுதிகளில் பொதுமக்கள்,குழந்தைகள் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் மூலம் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி அவர்கள் உத்தரவின்படி இன்று மாவட்டம் முழுவதும் நீர் நிரம்பியுள்ள குளம்,ஏரி, ஆறு, குட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை மூலம் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு படுத்தப்பட்டது.

ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க

காட்ரம்பாக்கம் மதுரா மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை, இவர் இன்று இரவு பைக்கில் சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜம்புகுளம் கூட்ரோடு அருகில் செல்லும் போது எதிரே புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த சதீஸ், சந்தோஷ் ஆகியோர் வந்த பைக் திருமலை மீது மோதியது. இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். கொண்டபாளையம் போலீசார் சென்று மூன்று பேரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு நாள் வரும் டிச.5-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் சுகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் டிச.5-ம் தேதி ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச 02) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலுள்ள புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

அரக்கோணம் நகராட்சி வின்டர்பேட்டை அன்னை தெரேசா தெருவை சேர்ந்த ரிஷ்வான்(12) நேற்று பெஞ்சல் புயல் தொடர் மழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான, ஈரமான வீட்டின் சுவற்றில் மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் கழிப்பறை மின் விளக்கு பட்டனை அழுத்தும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சிறுவனின் உடலுக்கு அமைச்சர் காந்தி இன்று அஞ்சலி செலுத்தி நிவாரண நிதி ரூ.4.5லட்சம் காசோலை வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக, குடிசை வீடுகள் உட்பட மொத்தம் 18 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், மின்சாரம் பாய்ந்து மூன்று கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

நெமிலி தாலுகா மேலபுலம் கிராமத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தை சுற்றிலும் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக மழை பெய்த நிலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பள்ளமான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகளை அமைச்சர் காந்தி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் சந்திரகலா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவையாற்றிய பெண்களிடம் இருந்து ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரா கலா தகவல் தெரிவித்துள்ளார். https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.