Ranipet

News May 18, 2024

குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

image

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 09.06.2024 அன்று நடைபெறவுள்ள குருப்4 எழுத்துத் தேர்விற்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்றது.

News May 17, 2024

குட்கா விற்ற கடைகளுக்கு அதிரடி சீல்

image

ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் உத்தரவின் பேரில் சிப்காட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிப்காட் பகுதியில் 6 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூபாய் 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

News May 17, 2024

அரக்கோணம்: ரயிலில் 16 கிலோ கஞ்சா! பேர் கைது

image

டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று(மே 16) அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது வேலூர் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொது பெட்டியில் பயணம் செய்த காஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(37), ஒடிசாவை சேர்ந்த அர்ஜுன் மாலிக்(24) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News May 17, 2024

சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பழைமை வாய்ந்த சோழபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்றிரவு(மே 16) நாக வாகன உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் பார்வதி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் நாக வாகனத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியம் சிவ வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்து அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News May 16, 2024

ரூ. 3 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல் ஒருவர் கைது

image

அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் போலீசார் இன்று வெங்கடேசபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அரக்கோணம் பழனி பேட்டையை சேர்ந்த நாராயணன் என்பவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரிடம் விசாரணை செய்ததில் 337 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்து கைது செய்தனர். இவற்றின் மதிப்பு ரூபாய் மூன்று லட்சம்.

News May 16, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து: 18 பேர் காயம் 

image

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வாலாஜா தாலுகா காட்டேரி கிராமம் அருகே இன்று வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் பேருந்து மோதி விபத்துக்கு உள்ளது. இதில் 15 பேருக்கு லேசான காயமும், மூன்று பேர் படுகாயமும் அடைந்தனர். 18 பேரையும் போலீசார் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

News May 16, 2024

உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி- ஆட்சியர்

image

அரக்கோணம் அரசு ஐடிஐயில் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி கட்டணம் இல்லை. 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜுன் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலம். கூடுதல் விவரங்களுக்கு 04177232616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி- ஆட்சியர்

image

அரக்கோணம் அரசு ஐடிஐயில் சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு உதவித்தொகையாக ரூ.750 வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி கட்டணம் இல்லை. 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜுன் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலம். கூடுதல் விவரங்களுக்கு 04177232616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

கழிப்பறையில் இருந்து குடிநீர் சப்ளை

image

ராணிப்பேட்டை, சோளிங்கரில் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் இருந்து குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். கழிப்பறையில் உறிஞ்சப்படும் நீரால் நோய் பரவும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கழிவுநீர் டேங்கில் இருந்து உறிஞ்சப்படும் நீர் குடிநீர் குழாய்க்குள் வருவதினால், இந்த நீரை குடிநீராக பயன்படுத்தப் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

News May 15, 2024

தமிழ்நாடு பசுமை விருது சாம்பியன் தேர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு பசுமை விருது சாம்பியன் தேர்வு தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பசுமை விருது சாம்பியன் வழங்குவது குறித்த கருத்துக்களை ஆட்சியர் வழங்கினார்.

error: Content is protected !!