Ranipet

News December 10, 2024

ரோந்து பணி போலீசார் தொலைபேசி எண்கள் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News December 10, 2024

காவல் துறை சார்பாக சர்வதேச மனித உரிமைகள் தினம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு தினந்தோறும் செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அதன்படி இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “சர்வதேச மனித உரிமைகள் தினம்” இன்று கொண்டாடப்படுகிறது. உலக மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் என ராணிப்பேட்டை காவல் துறை செய்தி வெளியிடப்பட்டது.

News December 10, 2024

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் காய்கறி விலை

image

காய்கறி கிலோவில் தக்காளி ரூ 30-40, வெண்டைக்காய் ரூ 40,வெங்காயம் ரூ 30,50சின்ன வெங்காயம் ரூ 50-60, கத்திரிக்காய் ரூ 40-60, புடலை ரூ 30, பூசணி ரூ 15, உருளைக்கிழங்கு ரூ 30-40, காலிஃப்ளவர் ரூ 20-25, முள்ளங்கி ரூ 30,கேரட் ரூ 40-60,தேங்காய் ரூ 20,25,30 பூண்டு 380-400,இஞ்சி ரூ 70-100,பீட்ரூட் ரூ 60-80,கீரை வகைகள் ரூ 15, வாழைத்தண்டு ரூ 10, கொத்தமல்லி ரூ 10, முருங்கை ரூ 300-350 என விற்பனை செய்யப்படுகிறது.

News December 10, 2024

ராணிப்பேட்டை அருகே இ-சேவை மையத்திற்கு சீல் 

image

சோளிங்கர் பஜார் தெருவில் தனியார் இ-சேவை மையம் இயங்குகிறது. இதன் உரிமையாளர் கார்த்திகா என்பவர், வருவாய் துறை மூலம் பொது மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் உடனடியாக பெற்று தருவதாக பொதுமக்களிடம் முறைகேடாக பணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி, சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி தலைமையில் நேற்று இரவு தனியார் இ-சேவை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

News December 10, 2024

ராணிப்பேட்டையில் 1.3 கோடியில் நல திட்ட உதவிகள் வழங்கல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னாள் படை வீரர் நலதுறை சார்பில் படை வீரர் கொடி நாள் தேநீர் விருந்து நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023-2024 – ஆம் ஆண்டில் 510 முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு 1.3 கோடியில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

News December 9, 2024

குறைதீர்வு நாள் கூட்டத்தில் 505 மனுக்கள் பெறப்பட்டன

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் இன்று (டிச 9) நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 505 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 9, 2024

ரோந்து பணி போலிசார் தொலைபேசி எண்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாருக்கு, புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

News December 9, 2024

ஊழல் இல்லா தேசத்தை உருவாக்குங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று “சர்வதேச ஊழல் எதிர்ப்பு” தினத்தை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், பொதுமக்கள் அதிகாரிகள் அனைவரும் “லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” எனவும் “ஊழல் இல்லாத தேசத்தை உருவாக்குங்கள்” எனவும் தெரிவித்துள்ளது.

News December 9, 2024

ராணிப்பேட்டையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த சாலை துணை மின் நிலையத்தில் நடைபெறுவதால் சாலை, மின்னல் ,பாராஞ்சி, எல்என்டி ,சித்தேரி ,தண்டலம் கும்பினிபேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் நேற்று தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்க

News December 9, 2024

போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

image

அரக்கோணம் காவல் உட்கோட்ட டிஸ்பி ஜாபர் சித்தீக் நேற்று (டிச 08) பொறுப்பேற்றார். அவருக்கு இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் உள்ள கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

error: Content is protected !!