India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அலுவலக பதிவறை, கம்ப்யூட்டர் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23,500 மற்றும் 4 புரோக்கர்களிடமிருந்து 22,500 என மொத்தம் 46 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூம் 9884098100 எண்ணிற்கும் அழைக்கலாம்.

அரக்கோணம் அடுத்த தக்கோலம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் இரண்டு வீடுகள் அமைந்துள்ளன. இரு நாட்களாக பெய்த கனமழையால் இரண்டு வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துகொண்டது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்த நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ரப்பர் படகில் இன்று அங்கு சென்று இரண்டு ஆண், இரண்டு பெண், 12 ஆடு, 25 கோழிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி புதிய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 12 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 14-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டு உள்ளார்.

தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

நெல் உற்பத்தி திறனுக்கான பயிர் மகசூல் போட்டியில் விவசாயிகள் பங்கேற்கலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும். இதற்கு தாங்கள் பயிர்சாகுபடி செய்யும் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு 60 இவர் குத்தகைக்கு பயிர் வைக்கும் நிலத்தில் நேற்று இரவு டிராக்டரில் உழுது கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கி சேட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெமிலி தாலுகா அத்திப்பட்டு கிராமம் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேட்டு 60 இவர் குத்தகைக்கு பயிர் வைக்கும் நிலத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு டிராக்டரில் உழுது கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறி டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கி சேட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சேட்டு உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.