Ranipet

News December 20, 2024

டெங்குவால் அடுத்தடுத்து உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை தேவதானம் பகுதியை சேர்ந்த பிரியா, மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். டெங்கு பாதிப்பு காரணமாக வேலூரில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த வாரம் ஹரி என்ற சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். டெங்குவால் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News December 20, 2024

ராணிப்பேட்டைக்கு ரூ.1,338 கோடியில் நான்கு வழிச்சாலை

image

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ராணிப்பேட்டையில் இருந்து ஆந்திரா வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,338 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் இருபுறமும் இருவழியாக சர்வீஸ் ரோடும், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டைக்கு 10 கி.மீ., புறவழிச்சாலை, 4 பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்க் குறிப்பிட்டுள்ளார்.

News December 19, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( டிச 19 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

News December 19, 2024

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் இன்று (19.12.2024) மக்கள் தேசம் கட்சியினர் அமித்ஷாவை உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News December 19, 2024

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டையில், நாளை (டிச.20) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12, ஐ.டி.ஐ. டிப்ளமோ, டிகிரி, நர்சிங், பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 10 மணிக்கு ஆற்காடு சாலை, பழைய BSNL அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 04172- 291400

News December 19, 2024

டெங்குவால் இளம்பெண் பலி

image

வாலாஜாபேட்டை தேவதானம் ரோடு ஜே.ஜே நகரைச் சோ்ந்த பிரியா (19) நா்சிங் படித்துவிட்டு மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் ஏற்பட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தாா்.

News December 18, 2024

ராணிப்பேட்டை மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2025

image

எழில் செஸ் அகாடமி சார்பில் வரும் 05.01.2025 அன்று ஆற்காடு தனியார் பள்ளியில், மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. 7 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வயதின் அடிப்படையில், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறும்.  பெண்கள் மற்றும் பொது பிரிவிற்கு வயது வரம்பு இல்லை. மேலும் 7904072119 எண்ணிற்க்கு அழைக்கவும்.

News December 18, 2024

வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் மோசடி: POLICE எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று(டிச.,18) வெளியிட்ட விழிப்புணர்வு செய்தியில், இணைய குற்றவாளிகள் டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்களை வாட்ஸ் ஆப்பில் கோப்புகளாக அனுப்புகின்றனர். இதுபோன்ற கோப்புகளை(APK File) பதிவிறக்கினால் மோசடியாளர்கள் சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு உங்களது வங்கி கணக்குகளை பயன்படுத்தி கொள்வர். எனவே கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT.

News December 18, 2024

துணை முதலமைச்ருடன் ராணிப்பேட்டை அமைச்சர்

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா சாலையில் புதியதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள “கோ – ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கோ – ஆப்டெக்ஸ் செயலாளர் உடன் இருந்தனர்.

News December 18, 2024

ராணிப்பேட்டையில் நாளை மின்நிறுத்தம்

image

ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (டிச.19) வியாழக்கிழமை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வீ.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்திநகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்னதகர குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!